சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

Published On:

| By Mathi

oftware, MBA Era Ends: Key Advice from CEA

சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ படிப்புகளுக்கான அதீதமான முக்கியத்துவம் தந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் (Anantha Nageswaran) தெரிவித்துள்ளார்.

ANI ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் வி. அனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT
  • மென்பொருள் (Software), கணினி அறிவியல் (Computers Science) மற்றும் எம்பிஏ (MBA) போன்ற துறைகளுக்கு அதீத முக்கியத்துவம் அளித்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
  • பட்டம் பெற்றவுடன் உயர்கல்வி அல்லது போட்டித் தேர்வுகள் என மட்டுமே சிந்திக்கும் ‘நேரியல்’ (Linear) முறைக்கு மாணவர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
  • ஏஐ தொழில்நுட்பம் வேலைச் சந்தையை (Job market) முற்றிலுமாக மாற்றியமைத்து வருகிறது. முன்பு மனிதர்கள் செய்து வந்த பல வேலைகளை இப்போது ஏஐ எளிதில் செய்துவிடுகிறது.
  • செயற்கை நுண்ணறிவால் எளிதில் நகலெடுக்க முடியாத அல்லது மாற்ற முடியாத திறன்களை (Trade Skills) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • சமையல் கலை, ஆலோசனை (Counselling), பராமரிப்பு (Caregiving) மற்றும் விருந்தோம்பல் (Hospitality) போன்ற துறைகளில் AI எதுவும் செய்ய முடியாது. இந்தத் துறைகளில் உள்ள உணர்வுப்பூர்வமான அல்லது தனித்துவமான மனிதச் செயல்பாடுகளை எளிதில் மாற்ற முடியாது.
  • எதிர்காலப் பொருளாதாரம் ‘Trade skills’ எனப்படும் தொழிற்திறன்களைப் பெற்றவர்களுக்கே சொந்தமானது.
  • சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தொழிற்திறன்களுக்கு அளிக்கும் அதே மதிப்பை இந்தியாவும் அளிக்க வேண்டும்.
  • வெல்டிங், பிளம்பிங், தச்சு மற்றும் மின்சார வேலை போன்ற பணிகளை இந்தியா நீண்ட காலமாகத் தாழ்வாகவே கருதி வருகிறது; இந்த மனநிலை மாற வேண்டும்.
  • செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல White-collar வேலைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
  • மனித உழைப்பு தேவைப்படும் வேலைகளுக்கு AI-ஆல் பாதிப்பு ஏற்படாது.
  • நண்பர்கள் சமூக ஊடகங்களில் பகிரும் வேலைவாய்ப்பு மற்றும் சம்பளத்தைக் கண்டு இளைஞர்கள் தங்களை ஒப்பிட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டாம்.
  • சமையல் கலை போன்ற தனித்துவமான திறன்களைக் கற்றுக்கொண்டவர்கள், அதைத் தாழ்வாக நினைக்காமல் பெருமிதம் கொள்ள வேண்டும்.
  • வேலைவாய்ப்பின்மை மட்டுமின்றி, கல்வி இருந்தும் வேலைக்குத் தகுதியற்ற சூழல் (Unemployability) நிலவுவதைத் தீர்க்க வேண்டும்.
  • உலகப் பொருளாதாரம் சுருங்கி வரும் நிலையில், இந்தியா தனது உற்பத்தித் துறையின் (Manufacturing) போட்டித்தன்மையை வலுப்படுத்த வேண்டும்.
  • பொருளாதாரம் வளருவதற்கு முன்பே இந்தியா ஆரோக்கியமற்ற நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
  • அனைத்து வருமானப் பிரிவினரிடையேயும் உடல் பருமன் அதிகரித்துள்ளது, இது நாட்டின் எதிர்கால உற்பத்தித்திறனைப் பாதிக்கும்.
  • அதிகப்படியான உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை, குறைந்த உடல் உழைப்பு மற்றும் தாமதமாக உண்ணும் பழக்கம் ஆகியவை ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன.
  • உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் ஒரு நாட்டின் பொருளாதார உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.
  • படிப்புக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தைத் தனிப்பட்ட உடல் நலத்திலும் இளைஞர்கள் முதலீடு செய்ய வேண்டும்.
  • தொழில்நுட்பத்தால் எளிதில் மாற்ற முடியாத, பிரத்யேகமான மனிதத் திறன்களை வளர்த்துக் கொள்வதே மிகச்சிறந்த பாதுகாப்பான வேலைவாய்ப்புத் திட்டம்.
  • பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்ததல்ல; அது ஆரோக்கியமான மற்றும் திறமையான குடிமக்களின் கூட்டு முயற்சி.
  • ‘டிகிரி’களை விட ‘திறன்களே’ (Skills) தற்போதைய மாறிவரும் பொருளாதாரச் சூழலில் நிலையான வருமானத்திற்கு வழிவகுக்கும். இவ்வாறு வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share