பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீர் உயர்வு, சிஎன்ஜி விலையும் உயர்வு: காரணம் என்ன?

Published On:

| By Santhosh Raj Saravanan

Petrol and diesel rates have increased in india check new rates

இன்று (15 மே) நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் (petrol and diesel rates) விலைகள் உயர்த்தப்பட்டுள்ளான. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி விலை உயர்வின் ஒரு பகுதியை எண்ணெய் நிறுவனங்கள் நுகர்வோர் மீது சுமத்தியுள்ளன. டெல்லியில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.97.77 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.90.67 ஆகவும் உள்ளது. இந்த எண்ணெய் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

சிஎன்ஜி விலைகளும் உயர்வு:

பெட்ரோல் மற்றும் டீசலைத் தொடர்ந்து, டெல்லியிலும் சிஎன்ஜி (CNG) விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. டெல்லியில் ஒரு கிலோ சிஎன்ஜி விலை 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வியாழக்கிழமையன்று மும்பை பெருநகரப் பகுதியிலும் (MMR) சிஎன்ஜி விலைகள் உயர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கும் ஒரு கிலோ சிஎன்ஜி விலை 2 ரூபாய் உயர்த்தப்பட்டது.

ADVERTISEMENT
விலைகள் ஏன் உயர்ந்தன?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் நீண்ட காலமாக போரும் மோதல்களும் நடந்து வருகின்றன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரின் போது ​​ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்து பெருமளவில் தடைபட்டது. இதற்குப் பிறகு, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் ஹோர்முஸ் ஜலசந்தி பிரச்சினைக்கு இன்னும் ஒரு தீர்வு காணப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், கச்சா எண்ணெயின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே பெட்ரோலிய நிறுவனங்கள் நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share