இந்திய பங்குச்சந்தை மதிப்பீடுகள் (Valuations) குறித்து எச்சரிக்கையுடன் இருக்கும் நிலையில், Motilal Oswal Private Wealth தனது முதலீட்டு உத்தியில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இந்திய பங்குகளில் ஒட்டுமொத்தமாக ‘Neutral’ நிலைப்பாட்டை தொடர்ந்தாலும், மிட் கேப் (Mid-cap) மற்றும் ஸ்மால் கேப் (Small-cap) பங்குகளுக்கான ஒதுக்கீட்டை 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இது இந்த இரண்டு பிரிவுகளிலும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாக நிறுவனம் கருதுவதை காட்டுகிறது.
புதிய முதலீட்டு ஒதுக்கீPடு எப்படி?
Motilal Oswal பரிந்துரைத்துள்ள புதிய சொத்து ஒதுக்கீட்டின்படி:
50% – மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள்
40% – லார்ஜ் கேப் மற்றும் ஹைபிரிட் முதலீட்டு திட்டங்கள்
10% – உலகளாவிய (Global) பங்குகள்
இந்த அணுகுமுறையின் மூலம் அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில் முதலீட்டை அதிகரிப்பதோடு, போர்ட்ஃபோலியோவில் சமநிலையையும் பராமரிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏன் மிட் கேப், ஸ்மால் கேப்பில் அதிக கவனம்?
கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட சந்தை திருத்தத்தால், மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் மதிப்பீடுகள் முன்பைவிட கவர்ச்சிகரமாக மாறியுள்ளதாக Motilal Oswal கூறுகிறது.
மேலும், இந்தப் பிரிவுகளில் உள்ள பல நிறுவனங்கள் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியுடன் நேரடியாக தொடர்புடையவை என்பதால், எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
அதே நேரத்தில், இந்திய பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த மதிப்பீடு இன்னும் உயர்ந்த நிலையில் இருப்பதால், முழுமையாக புல்லிஷ் (Bullish) நிலைப்பாட்டை எடுக்காமல் ‘Neutral’ அணுகுமுறையை நிறுவனம் தொடர்கிறது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
நிபுணர்களின் கருத்துப்படி, மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் அதிக லாப வாய்ப்பு இருந்தாலும், அதே அளவில் விலை ஏற்ற-இறக்கமும் (Volatility) அதிகமாக இருக்கும்.
எனவே, ஒரே பிரிவில் முழு முதலீட்டையும் செய்யாமல், லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் மற்றும் சர்வதேச முதலீடுகளை இணைத்து பரவலான (Diversified) போர்ட்ஃபோலியோ அமைப்பது பாதுகாப்பான அணுகுமுறையாகும்.
குறிப்பாக நீண்டகால இலக்குடன் SIP அல்லது கட்டுப்பாடான முதலீட்டு திட்டத்தைப் பின்பற்றும் முதலீட்டாளர்களுக்கு, சந்தை ஏற்ற-இறக்கங்களை சமாளிப்பது எளிதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
