தமிழக டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Makesh

தமிழகத்தில் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக (DGP) மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். யூபிஎஸ்சி (UPSC) மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களைப் பரிந்துரைத்திருந்த நிலையில், மகேஷ் குமார் அகர்வாலைத் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தமிழகத்தின் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, தற்போது மகேஷ் குமார் அகர்வாலை புதிய டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share