மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 285 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published On:

| By Mathi

Madurai-Kumbabishekam-SPL Buses

Madurai Meenakshi Amman Temple Consecration: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறும் நிலையில் இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 285 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை (செப்டம்பர் 17) நடைபெற உள்ளதை முன்னிட்டு, பக்தர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சீரான மற்றும் தங்குதடையற்ற போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இன்று அன்று KCBT ( சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்) முதல் மதுரை வரை 50 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கான தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்:

ADVERTISEMENT

கோயம்புத்தூர் – 30 பேருந்துகள்

அருப்புக்கோட்டை – 25 பேருந்துகள்

ADVERTISEMENT

விருதுநகர் – 10 பேருந்துகள்

திருப்பூர் – 30 பேருந்துகள்

சிவகாசி – 30 பேருந்துகள்

தேனி – 30 பேருந்துகள்

ராமநாதபுரம் – 30 பேருந்துகள்

ராஜபாளையம் – 30 பேருந்துகள்

திண்டுக்கல் – 20 பேருந்துகள்

மதுரை மாநகரப் பகுதியில் திருமங்கலம்
மேலூர்
திருப்புவனம்
வாடிப்பட்டி
நத்தம்
பூவந்தி மற்றும் உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 பேருந்துகள் இயக்கப்படும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share