தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் (85) இன்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.
காரில் சென்று கொண்டிருந்த கே.ராஜன் திடீரென காரை நிறுத்த சொல்லி இறங்கியதாகவும், பின்னர் ஆற்றில் குதித்ததாகவும் சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக குடும்பத்திரை விட்டு பிரிந்து கே.ராஜன் தனியார் ஹோட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கே.ராஜனின் இந்த திடீர் மறைவு தமிழ் திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
