மீஞ்சூர் மாணவி சம்பவம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

eps

தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையை அடுத்த மீஞ்சூர் பகுதியில், வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தனது வீட்டில் நேற்று இரவு தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த மூன்று இளைஞர்கள் கொண்ட கும்பல், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற மாணவியை அந்தக் கும்பல் அறிவாளால் கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

ADVERTISEMENT

இதில் படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், ஆவடி காவல் ஆணையர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இச்சம்வத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இது தான் திமுக ஆட்சிக்காலம்!

படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.

இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார்.

நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்- இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?

தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.

ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-

தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share