தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்கவிடாமல் தடுப்பதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நாளை மே 8-ந் தேதி போராட்டம் நடத்தும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநரைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
