மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களால் தமிழ்நாட்டில் அமைப்புசாரா நல வாரியங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பான மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட விளக்கம்: சமூகப் பாதுகாப்பு சட்டத்தொகுப்பு, 2020, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது
புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கட்டுமானம் மற்றும் பிற துறை நல வாரியங்களின் எதிர்காலம் குறித்து தமிழ்நாட்டில் பலவகையான ஊகங்கள் நிலவி வரும் நிலையில், மாநில அளவிலான எந்த நல வாரியமும் ரத்து செய்யப்படவில்லை என்பதை அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
மாநில நல வாரியங்களின் சட்டப்பூர்வ நிலை, பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகள் அப்படியே உள்ளன. தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்துவது தமிழ்நாட்டின் நல வாரியங்களின் செயல்பாட்டையோ அல்லது இருப்பையோ எந்த வகையிலும் பாதிக்காது. இந்த வாரியங்கள் முன்பு போலவே செயல்படும்” என்றும் திட்டவட்டமாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலைப்பாடு ஏற்கனவே தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டதொகுப்புகள் காரணமாக வாரியங்கள் கலைக்கப்படும் என்று கூறும் எந்தவொரு அறிக்கையும் “உண்மையில் தவறானது மற்றும் அடிப்படையற்றது” என்று ஒன்றிய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தவறான தகவல்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும், தொழிலாளர் சீர்திருத்தங்களை செயல்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளை நம்பியிருக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.
