“வருஷத்துக்கு ₹72 லட்சம் சம்பளம் தர்றோம், ஆனா ஒரு நாள் கூட லீவு எடுக்கக் கூடாது, தினமும் ஆபீஸ்க்கு வரணும்” (Strict WFO) – இப்படி ஒரு வேலை வாய்ப்பு உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? பலரும் எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனடியாக ‘சரி’ என்று ஒற்றைக்காலயில் நிற்பார்கள்.
ஆனால், ஒரு ஐடி ஊழியர் இந்த இமாலயச் சம்பள ஆஃபரை (₹72 LPA Offer) தூக்கி எறிந்துவிட்டு, “எனக்கு இந்த வேலை வாய்ப்பே வேண்டாம்” என்று மறுத்துள்ளார். சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் இந்தச் சம்பவம், தற்போது கார்ப்பரேட் உலகில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது? ஏன் இந்த மறுப்பு?
சம்பந்தப்பட்ட ஊழியருக்கு ஒரு முன்னணி நிறுவனத்திலிருந்து ஆண்டுக்கு ₹72 லட்சம் பேக்கேஜ் உடன் கூடிய ஒரு உயரிய பதவிக்கான வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. நேர்காணல் (Interview) அனைத்தும் முடிந்து, ஆஃபர் லெட்டர் கையில் வரும்போதுதான் அந்த நிறுவனத்தின் சில விசித்திரமான மற்றும் கடுமையான நிபந்தனைகள் தெரியவந்துள்ளன:
- அதிதீவிர அலுவலகப் பணி (Strict WFO): வாரத்தின் அனைத்து நாட்களும் கட்டாயம் அலுவலகத்திற்குத்தான் வர வேண்டும். வீட்டில் இருந்து வேலை செய்ய (Work From Home / Hybrid) ஒரு சதவீதம் கூட அனுமதி கிடையாது.
- விடுப்பு இல்லாத கொள்கை (No Leave Policy): மிக அவசரக் காதைத் தவிர்த்து, ஊழியர்கள் சாதாரணமாக விடுப்பு எடுப்பது அங்கே முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது அல்லது கடுமையாக எதிர்க்கப்படுகிறது.
“பணம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட என்னுடைய மன அமைதியும், தனிப்பட்ட வாழ்க்கையும் (Work-Life Balance) முக்கியம்” என்று கூறி அந்த ஊழியர் இந்த ஆஃபரை நாகரிகமாக மறுத்துள்ளார்.
பற்றி எரியும் இணையம்: நெட்டிசன்களின் அதிரடி ரியாக்ஷன்கள்!
இந்தச் சம்பவம் எக்ஸ் (X) மற்றும் ரெடிட் (Reddit) தளங்களில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே, இணையவாசிகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து தங்களது கருத்துக்களை மோதிக்கொள்ளத் தொடங்கினர்.
ஊழியருக்கு ஆதரவான கருத்துக்கள்:
- “மிகவும் சரியான முடிவு! நச்சுத்தன்மை வாய்ந்த வேலைச் சூழலுக்கு (Toxic Work Culture) நம்முடைய ஆரோக்கியத்தை விலை பேசக் கூடாது. ₹72 லட்சம் கொடுத்தாலும், அதை அனுபவிக்க நிம்மதியும் நேரமும் இல்லையென்றால் அந்தப் பணத்தால் என்ன பயன்?”
- “நிறுவனங்கள் தங்களை அடிமைகள் போல நடத்த நினைப்பதை ஊழியர்கள் எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதற்கான சான்று இது.”
எதிர்க்கும் நெட்டிசன்களின் கருத்துக்கள்:
- “₹72 லட்சமா? அப்படின்னா நான் ஆபீஸ்லயே கூட படுத்துத் தூங்குவேன்! இவ்வளவு பெரிய தொகையை லீவுக்காகவும், WFO-விற்காகவும் உதறுவது முட்டாள்தனம்.”
- “ஆரம்பத்தில் இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு, பிறகு நல்ல நிலைக்குச் சென்றிருக்கலாம். இது கைநழுவிப்போன ஒரு மிகப்பெரிய வாய்ப்பு.”
மாறும் கார்ப்பரேட் உலகம் உணர்த்தும் பாடம்: ஒரு காலத்தில் வேலை தேடுபவர்கள் ‘சம்பளம்’ (Salary Package) ஒன்றை மட்டுமே பிரதானமாகப் பார்த்தார்கள். ஆனால், தற்போதைய இளம் தலைமுறையினர் பணத்தை விடத் தங்களது மனநலன் (Mental Well-being) மற்றும் சுதந்திரத்திற்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் உலகிற்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது.
