மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில்,
– பொதிகைமலையில் மலையேற்ற சுற்றுலா திட்டம் ஊக்கப்படுத்தப்படும்
– 10,000 சுற்றுலா வழிகாட்டிகள் நியமிக்கப்படுவர்
– குஜராத்தின் தோலவீரா, தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 தொல்லியல் அகழாய்வு இடங்களில் கலாசார மையங்கள் அமைக்கப்படும்.
– பழவேற்காடு ஏரியில் பறவைகளை காண்க பிரத்யேக காட்சி அமையம் அமைக்கப்படும்.
5 பல்கலைக் கழக நகரங்கள் உருவாக்கம்
கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடி ஊக்குவிக்கப்படும்
– 20 புதிய தேசிய நீர்வழிப் பாதைகள் உருவாக்கப்படும்
– கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு இடர் உத்தரவாத நிதியம் உருவாக்கப்படும்.
– பொதுக்கட்டமைப்புகளுக்கான மூலதன ஒதுக்கீடு 12.2 லட்சம் கோடி ரூபாய்.
– சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 10,000 கோடி ரூபாய் வளர்ச்சி நிதியம்.
– கொள்கலன் உற்பத்திக்கு 10,000 கோடி ரூபாய் முதலீடு
-நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சிறப்பு வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
