மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக கூட்டணி! ‘தாக்கரே’ கோட்டை தகர்ந்தது!

Published On:

| By Mathi

Brihanmumbai Municipal Corporation,

மகாராஷ்டிராவில் 28 ஆண்டுகளாக சிவசேனாவின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சியை (Brihanmumbai Municipal Corporation) பாஜக கூட்டணி கைப்பற்றி சரித்திரம் படைத்துள்ளது.

மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று ஜனவரி 15-ந் தேதி நடைபெற்றது. இதனையடுத்து பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ADVERTISEMENT

மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 227 கவுன்சிலர் இடங்களில்- வார்டுகளில் பாஜக- 84; ஷிண்டே சிவசேனா 26; அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ்- 2 ஐ கைப்பற்றியுள்ளன.

உத்தவ் தாக்கரே சிவசேனா 63, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 1, காங்கிரஸ் 23, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 6 இடங்களில் வென்றுள்ளன.

ADVERTISEMENT

தேர்தல் நடைபெற்ற மொத்தம் 2869 கவுன்சிலர் இடங்களில்- வார்டுகளில் பாஜக மட்டும் 1377-ல் வெற்றி பெற்றுள்ளது. ஷிண்டே சிவசேனா 330; காங்கிரஸ் 327; உத்தவ் தாக்கரே சிவசேனா 167; அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 151; சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 34 இடங்களில் வென்றுள்ளன.

மும்பை மாநகராட்சியை 28 ஆண்டுகளாக தாக்கரேவின் ஒருங்கிணைந்த சிவசேனா கோட்டையாக வைத்திருந்தது. தற்போது சிவசேனா பிளவுபட்டதால் பாஜக கூட்டணி வசமாகிவிட்டது மும்பை மாநகராட்சி.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share