டெல்லி சென்ற முதல்வர் விஜய்யை (CM Vijay) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) சந்திக்காதது தமிழ்நாட்டை அவமதிப்பதாகும் என சிபிஐ கட்சியின் (CPI) எம்.பி. சுப்பராயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுப்பராயன் எம்.பி. கூறுகையில், “நியூடெல்லி சென்ற தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு,சந்திக்க நேரம் ஒதுக்காமல் புறக்கணித்த, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் போக்கு, அவர் வகிக்கும் பொறுப்பிற்கும் பொருத்தமானதல்ல என்பதோடு, கடும் கண்டனத்திற்கும் உரியதாகும்!
இது,தமிழ்நாட்டையே அவமதித்த ஆணவப்போக்காகும்!

அமித்ஷாவின் இந்தப்போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் மேலும் தண்டிப்பார்கள்! வேரும்,வேரடி மண்ணோடும் பெயர்த்தெறியவேண்டிய தீயசக்தி ஆர்எஸ்எஸ்-பாஜக என்பதை தமிழ்நாடு என்றும் மறந்துவிடக்கூடாது!” என்றார்.
