செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியின் வேகம் குறையலாம் என்ற பேச்சு, தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய IT பங்குகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக TCS, Infosys உள்ளிட்ட முன்னணி IT நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.
AI வளர்ச்சியில் கட்டுப்பாடு?
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை சற்று கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்தை Anthropic நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Dario Amodei முன்வைத்துள்ளார். இதற்கு OpenAI CEO Sam Altman உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையின் முக்கிய தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் AI காரணமாக பாரம்பரிய IT சேவைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு உடனடியாக நிகழாது என்ற எதிர்பார்ப்பு சந்தையில் உருவாகியுள்ளது.
IT பங்குகளில் வாங்கும் ஆர்வம்?
AI வளர்ச்சியின் தாக்கத்தால் இந்திய IT பங்குகள் ஏற்கெனவே கணிசமாக சரிந்துள்ளன. TCS மற்றும் Infosys உள்ளிட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய குறியீடு, 2024 டிசம்பர் உச்சத்திலிருந்து சுமார் 226 பில்லியன் டாலர் மதிப்பை இழந்துள்ளதாக Bloomberg தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் AI குறித்த எதிர்மறை பார்வை சற்று தளர்ந்தால், முன்பு விற்பனை செய்த முதலீட்டாளர்கள் மீண்டும் வாங்கத் தொடங்கலாம் என சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
குறைந்த மதிப்பீடு ஒரு வாய்ப்பா?
Nifty IT குறியீடு அதன் உச்சத்திலிருந்து சுமார் 37% கீழே உள்ளது. மேலும், எதிர்பார்க்கப்படும் வருவாயுடன் ஒப்பிடும்போது சுமார் 16 மடங்கு மதிப்பீட்டில் வர்த்தகமாகிறது. இது ஐந்து ஆண்டு சராசரியைவிட குறைவான நிலையாகும்.
எனவே AI தொடர்பான அச்சம் குறைந்து, அமெரிக்க டாலர் மற்றும் வட்டி விகித சூழலும் சாதகமாக மாறினால், TCS, Infosys, HCL Tech, Wipro உள்ளிட்ட முன்னணி IT பங்குகளில் குறுகிய கால மீட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
