தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து இன்று (ஆகஸ்ட் 31) தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவில், 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
அஞ்சித் நாயர் – தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
நீல் சர்மா – கோவில்பட்டி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
பிஸ்வஜித் பாண்டா – திருநெல்வேலி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
கே. நேஹா – ராமநாதபுரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
சைந்தானே ஸ்வப்னிலா அனில் – ராஜபாளையம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
தானு சிங் – மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
ஆசிஷ் புனியா – மதுரை மாநகர அண்ணா நகர் சரக உதவி காவல் கண்காணிப்பாளர்.
பி. அங்கிதா – தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
எஸ். இன்பா – திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
சத்ரியா கவின் – கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
பிரியங்கா பார்கவ் – நாகப்பட்டினம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
எஸ். அஸ்வினி – நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
மன்னம் சுஜித் சம்பத் – நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
பி. மஞ்சிமா – திண்டுக்கல் ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்.
ராகுல் வி கோபால் – திருவண்ணாமலை ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளனர்.
