நதிநீர் ‘பகிர்வி’ல் இருந்து நதிநீர் ‘ஒத்துழைப்பு’.. கர்நாடகா முதல்வரின் புதிய முழக்கம்!

Published On:

| By Mathi

From Water Sharing to Water Cooperation: Karnataka CM DK Shivakumar's New Slogan

நதிநீர் ‘பகிர்வு’ என்ற நிலையில் இருந்து நதிநீர் ‘ஒத்துழைப்பு’ என்பதை நோக்கி மாநிலங்கள் நகர வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார் (DK Shivakumar) வலியுறுத்தி உள்ளார்.

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார் பேசியதாவது:

ADVERTISEMENT
  • காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணாறு மற்றும் பாலாறு படுகைகளில் கர்நாடகாவின் சட்டப்பூர்வ பங்கையும், நதிநீர்ப் பங்கிடும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்போம்; அதே நேரத்தில், சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நதிநீர் பகிர்வு என்பதில் இருந்து நதி நீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நாம் மாற வேண்டும்.
  • காவிரியின் குறுக்கே கட்டப்படும் மேகதாது அணை கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கும் கூட முக்கியமானது.
  • மேகதாது அணையில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
  • நாட்டின் மக்கள்தொகையில் 5.5 சதவீதத்தைக் கொண்டுள்ளது கர்நாடகா. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 9% பங்களிப்பை கர்நாடகா மாநிலம் வழங்குகிறது.
  • இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகாவின் பங்களிப்பு 42%.
  • கர்நாடகாவுக்கான நிதிப் பகிர்வை 3.6%-ல் இருந்து 4.7% ஆக மாற்ற வேண்டும்; 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் 6 ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு ரூ.65,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • 15-வது நிதிக் குழு பரிந்துரைத்த சிறப்பு மானியமான ரூ.11,500 கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்.
  • 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொண்டு தென்னகத்தின் அரசியல் குரலைப் பாதுகாக்க வேண்டும்; மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு காத்திருக்காமல், மகளிர் இடஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • மத்திய அரசு நிறைவேற்றியுள்ள கனிம வள திருத்த சட்டத்தை மறு ஆய்வு செய்து, கனிம வளம் நிறைந்த மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • வலிமையான இந்தியாவுக்கு வலிமையான தென்னிந்தியா அவசியம். தென்னிந்தியாவின் பொருளாதார பங்கிளிப்பை அங்கீகரிக்க வேண்டும். வலிமையான இந்தியாவை கட்டி எழுப்ப மத்திய அரசு மற்றும் இதர தென் மாநிலங்களுடன் கர்நாடகா இணைந்து செயல்பட தயாராக உள்ளது.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share