2026-27-ஆம் ஆண்டு வாக்கில் இந்திய பெருநிறுவனங்களின் ஆள்சேர்ப்பு (corporate hiring) முதன்மையாக நடுத்தரப் பதவிகளில் கவனம் செலுத்தும் என்றும், சம்பள உயர்வு 5 முதல் 10 சதவீதம் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, மனிதவள ஆட்சேர்ப்பு நிறுவனமான ஜீனியஸ் ஹெச்.ஆர்.டெக் (Genius HRTech) வெளியிட்ட ஒரு அறிக்கையில் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையின்படி, 49 சதவீத நிறுவனங்கள் குறிப்பாக நடுத்தர நிலை நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளன.
மொத்தப் பணியாளர் விரிவாக்கத்தைப் பொறுத்தவரை, 28 சதவீத நிறுவனங்கள் 10 முதல் 15 சதவீதத்திற்கும் அதிகமான ஆட்சேர்ப்பு வளர்ச்சியைத் திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில் 43 சதவீத நிறுவனங்கள் ஐந்து சதவீதம் வரையிலான வரையறுக்கப்பட்ட அதிகரிப்பைக் கணித்துள்ளன. சம்பளத்தைப் பொறுத்தவரை, 46 சதவீத நிறுவனங்கள் ஐந்து முதல் 10 சதவீதம் வரை உயர்வு அளிக்கத் திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில் 34 சதவீத நிறுவனங்கள் 10 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வைக் குறிப்பிட்டுள்ளன.
புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதால் 57 சதவீத நிறுவனங்கள் தங்கள் சம்பளக் கட்டமைப்புகளில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தயாராகி வருகின்றன. நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்கள் (48 சதவீதம்) சம்பள உயர்வினால் அதிகம் பயனடைவார்கள் என்றும், இளநிலை மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கான பங்கு முறையே 26 மற்றும் 22 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வேலையை விட்டு வெளியேறும் ஊழியர்கள்:
ஊழியர் விலகல் என்பது நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய கவலையாக உள்ளது. ஏறக்குறைய 55 சதவீத நிறுவனங்கள் விலகல் விகிதம் 10 முதல் 20 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளன. அதே நேரத்தில் 15 சதவீத நிறுவனங்கள் இந்த விகிதம் 20 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கின்றன. நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களே மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவினராக உருவெடுத்துள்ளனர். மேலும் 67 சதவீத நிறுவனங்கள் அவர்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக அடையாளம் கண்டுள்ளன.
