கார் விபத்து தொடர்பான காவல்துறையின் அறிக்கை உண்மைக்கு புறம்பானதாகவும், ஒரு சார்புடையதாக உள்ளதாகவும் மதுரை ஆதீனம் இன்று (மே 5) குற்றம்சாட்டியுள்ளார்.
மே 3-ஆம் தேதி சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து சென்னை சென்றார். அப்போது அவரது கார் உளுந்தூர் பேட்டை அருகே சென்றபோது, மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்து கள்ளக்குறிச்சி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இந்த விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து” என்று விளக்கமளித்தது. மேலும், மதுரை ஆதீனம் ஓட்டுநர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. madurai pontiff accusation against police
இதுதொடர்பாக மதுரை ஆதீனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வாகனத்திற்கு பதிவு எண் போர்ட் இல்லை!
கடந்த 02.05.2025 அன்று காலை உளுந்தூர்பேட்டை ரவுண்டானத்தில் நடந்த சம்பவம் தொடர்பான காவல்துறையின் உண்மைக்கு புறம்பான விளக்க அறிக்கையை மறுக்கின்றோம்.
கார் விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் இதுவரை எந்தவித புகாரையும் தெரியப்படுத்தவில்லை என காவல்துறை அறிக்கையில் பார்த்தோம். madurai pontiff accusation against police

சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே சரியாக காலை 09.42 மணிக்கு காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100-க்கு கால் செய்யப்பட்டு உடனடி தகவலை பரிமாற்றி விட்டோம். அதன் பிறகு காலை 10.09-க்கு காவல் உளவு பிரிவு அதிகாரிக்கு தகவலை தெரிவித்தும், காலை 11.47 மணிக்கு உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் பேசியும் இந்த சம்பவம் தொடர்பாக பலமுறை உள்ளூர் காவல்துறை அதிகாரியிடம் பேசிக் கொண்டும் இருந்தோம். மாலை 5.39 மணிக்கு உளவுத்துறை DSP அவர்களும் எங்களை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார். madurai pontiff accusation against police
முதல் தகவல் அறிக்கை!
நாங்கள் சென்ற சாலையில் எந்தவித தடுப்புகளும் இன்றி சாலை சீராக இருந்தது. சேலம் To சென்னை சாலையில் தற்காலிக தடுப்புகள் இருந்தும் கூட மிக வேகமாக வந்து எங்களுடைய வாகனத்தில் மாருதி சுசுக்கி வாகனம் மோதியது. சம்பவ இடத்தில் நாங்கள் பார்க்கும் பொழுது எதிரில் வந்த வாகனத்திற்கு பதிவு எண் போர்ட் இல்லை.
இரண்டு இஸ்லாமியர்கள் மட்டும் வாகனத்தில் இருந்தனர். காவல்துறையை தொடர்பு கொண்டு இருக்கின்றோம் என்று தெரியப்படுத்திய உடன், உடனடியாக சம்ப இடத்தை விட்டு அவர்கள் நகர்ந்து விட்டார்கள். சம்பவம் நடந்து 26 மணி நேரம் கழித்தும் எந்தவித தகவலையும் காவல்துறை தெரிவிக்காததால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்தது.
மாநாட்டு மேடையில் மதுரை ஆதீனம் குரு மகா சந்நிதானம் இது சதியாக இருக்கும் என்று பேசிய உடனே மிகப்பெரிய பரபரப்பாக பேசப்பட்டது.
சம்பவம் தொடர்பான உண்மைத்தன்மை அறிக்கையை காவல்துறை 03.05.2025 அன்று இரவு வெளியிட்டது.
எங்களை பற்றியும் எங்கள் தரப்பு வாகனத்தைப் பற்றியும் முழு விவரங்களை தெளிவாக காவல்துறை அறிவித்தது. madurai pontiff accusation against police
காவல்துறை மீது சந்தேகம்!
எதிர்த்தரப்பு வாகனத்தை பற்றியும் அவருடைய விவரங்கள் பற்றியும் தடுப்புகளைத் தாண்டி அவர்கள் மோதியதை பற்றியும் பதிவு எண் பொருத்தப்படாத வாகனமாக நாங்கள் குற்றம் சாட்டியதை பற்றியும் ஒரு இடத்தில் கூட காவல் துறை பதிவு செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது.
முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து எங்களிடம் அளித்த நகலை பார்த்தோம். 02.05.2025 நடந்த விபத்திற்கு 04.05.2025 அன்று முபாரக் அலி S/o. அப்துல்லா என்பவர் புகார் அளித்ததாகவும் அதன் அடிப்படையில் இரு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அறிந்தோம்.
அவசர அழைப்பு 100-க்கு கால் செய்து முறையாக முதலில் பதிவு செய்தது நாங்கள். ஆனால், காவல்துறையிடம் எந்தவித புகார் மதுரை ஆதீனம் சார்பாக பெறப்படவில்லை என்பது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது. madurai pontiff accusation against police
15க்கு மேற்பட்ட முறை காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி இது பற்றின விளக்கங்களைக் கேட்டு அறிந்தும் கூட முழு தவறு மதுரை ஆதீனம் பக்கம் தான் இருக்கிறது என்பது போல தோற்றம் உருவாகியுள்ளது வேதனை அளிக்கிறது.

அந்த மாருதி சுசுகி வாகனத்தில் இருவர் மட்டுமே பிரயாணம் செய்து வந்தார்கள். ஆனால், முதல் தகவல் அறிக்கையில், குடும்பத்தோடு சென்றோம் என்ற தவறான தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியதனை மறைக்கும் வண்ணம் சீராக இருந்த சாலையில் பயணித்த நாங்கள்தான் விபத்து ஏற்படுத்தி விட்டோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. விபத்து நடந்த அடுத்த நிமிடமே காவல்துறையிடம் முறையாக தகவல் தெரிவித்து தொடர்ந்து அதைப் பற்றி விவரத்தை தெரிந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தோம்.
காவல்துறை எதிர் தரப்பினர் பற்றி விவரத்தை தொடர்ந்து எங்களுக்கு அளிப்பதை மறுத்து வந்தது சந்தேகத்துக்கிடமானது. மீண்டும் எதிர் தரப்பில் இருவர் மட்டும் பயணித்து வந்த வாகனத்தில் குடும்பத்தோடு பயணம் செய்து வந்த வாகனம் என்று சொல்லி இருப்பது மேலும் வேதனை அளிக்கிறது. முன்னுக்கு பின் முரண்பாடாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை
ஒரு சார்புடையதாக உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.madurai pontiff accusation against police