சல்லிசல்லியா நொறுக்கீட்டீங்களே.. Thug Life Movie Review in Tamil
ஒரு திரைப்படம் என்பது பலருக்கு வெறும் கேளிக்கை அல்ல; அப்படம் குறித்த முதல் அறிவிப்பு வெளியாவது தொடங்கி, திரையரங்கில் பார்த்தபின்னும் எண்ணமாக, பேச்சாக, தினசரி வாழ்வின் பிரதிபலிப்பாக அதன் தாக்கம் நீண்டுகொண்டே இருக்கும். அதனை மிகச்சரியாகச் செய்த திரைப்படங்களை ‘கிளாசிக்’ என்று சொல்கிறோம்; அதனைத் தந்தவர்களை ஜாம்பவான்களாக கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட ஜாம்பவான்கள் சிலர் ஒன்றிணைகிறபோது உருவாகிற எதிர்பார்ப்பு சாதாரணமானதல்ல.
கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஜாம்பவான்கள் பட்டாளமே ஒன்றிணைந்த ‘தக் லைஃப்’ அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கியது. ‘அது போதாது’ என்று படக்குழுவினர் வேறு அதனை மேலும் உயரங்களுக்குக் கொண்டு சென்றனர். ‘கன்னடம்’ குறித்து கமல் பேசியது, ‘தக் லைஃப் படத்தைக் கொண்டாடியே தீர வேண்டும்’ என்கிற எண்ணத்தை அவரது ரசிகர்களிடத்தில் உருவாக்கியது.
இப்போது ‘தக் லைஃப்’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. மலையென உயர்ந்திருக்கிற எதிர்பார்ப்பினை அது பூர்த்தி செய்திருக்கிறதா?
இதுவும் ‘கேங்க்ஸ்டர்’ படம்தான்..!

‘கேங்க்ஸ்டர்’ கதை என்றால் மும்பை, கொல்கத்தா, சென்னை, கொச்சி, கோயம்புத்தூர் என்று சில நகரங்களைக் காட்டுவது திரையுலகினரின் வழக்கம். அந்த வரிசையில், ’தில்லியில் நடக்கிற கதை இது’ என்று மணிரத்னம் கதை சொல்லத் தொடங்குகிறார். நாமும் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்கிறோம். Thug Life Movie Review in Tamil
1994இல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் காட்டுவதில் இருந்து கதை தொடங்குகிறது.
சீட்டுக்கட்டை நிமிர்த்து வைத்தாற் போன்று பழைய கட்டடங்கள். வீடுகள், கடைகள் என்றிருக்கும் அவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலொரு இடத்தில் இரண்டு கேங்க்ஸ்டர் கும்பல் சமாதானம் பேசுகின்றன. Thug Life Movie Review in Tamil
ஒருபக்கம் மாணிக்கம் (நாசர்), ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) குரூப் இருக்கிறது. இன்னொரு பக்கம் சதானந்த் (மகேஷ் மஞ்ச்ரேகர்) ஆட்கள் இருக்கின்றனர்.
என்ன பேசுகின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், உடன்பாடு ஏற்பட்டதாகச் சொல்லி மாணிக்கமும் சதானந்தும் கைகுலுக்குகின்றனர். அதில் சிறிதும் உடன்பாடு இல்லை என்பது போல முழிக்கிறார் சக்திவேல். Thug Life Movie Review in Tamil
சதானந்த் சென்றபிறகும் யோசித்துக் கொண்டே இருக்கிறார். ஜன்னல் வழியாகப் பார்த்தால், அவர் எதிரே வந்து கொண்டே இருக்கிறது போலீஸ் படை. இன்ஸ்பெக்டர் சாமுவேல் ராயப்பா (பாபுராஜ்) அதிலொருவராக இருக்கிறார். சதானந்தை பார்த்து சமிக்ஞை செய்தவாறே வருகிறார். Thug Life Movie Review in Tamil
அடுத்த நொடியே சக்திவேல் உஷாராகிறார். ‘எல்லோரும் தப்பிச்சு போயிடுங்கடா’ எனும் ரேஞ்ச்சில் அவர் அலற, பூட்டப்பட்டிருக்கும் கதவு வழியே ஒரு செய்தித்தாள் வந்து விழுகிறது. உடனே மாணிக்கம் துப்பாக்கியால் சுடுகிறார். ‘வேண்டாம்’ என்று சக்திவேல் சொல்வதற்குள் அது நிகழ்ந்துவிடுகிறது. Thug Life Movie Review in Tamil
செய்தித்தாள் விற்பனை செய்யும் நபர் குண்டடி பட்டு கீழே விழுகிறார். வேறு வீடுகள், கடைகளில் செய்தித்தாளை கொடுக்கச் சென்ற அவரது மகளும் மகனும் ‘அப்பா’ என்று ஓடி வருகின்றனர். அதற்குள், அந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர் போலீசார்.
‘எப்பா.. இவ்ளோ கூட்டம் இருக்கிற இடத்துல ஷூட் அவுட் பண்ணலாமாப்பா’ என்று ரசிகர்கள் சொன்னாலும், திரையில் இருப்பவர்கள் கேட்பதாக இல்லை.
அப்புறமென்ன? செய்தித்தாள் விற்பனை செய்பவரின் சடலத்தைப் பார்த்து அவரது மகன் அழுது கொண்டிருக்கிறார். குண்டு மழைக்கு நடுவே, அவரை தூக்கிக்கொண்டு போகிறார் சக்திவேல். அந்த சிறுவனின் பெயர் அமரன். அவரது தங்கை சந்திரா என்ன ஆனார் என்று தெரியவில்லை. Thug Life Movie Review in Tamil
வீடு சென்றதும், அமரனின் பின்னணியைக் கேட்கிறார் சக்திவேல். ‘யாருமில்லாதவர்’ என்று அறிந்ததும், அவரைத் தானே வளர்க்க முடிவு செய்கிறார். குழந்தை சந்திராவைத் தேடிக் கண்டுபிடித்து தருவதாக உறுதியளிக்கிறார். Thug Life Movie Review in Tamil
இதன் பிறகு, 2016இல் நிகழ்வதாக கதை தடம் மாறுகிறது.

மேற்சொன்ன காட்சியை உள்வாங்கிக் கொண்டதும், அந்த சக்திவேல் எப்படிப்பட்ட ‘கேங்க்ஸ்டராக’ இருந்தார் என்பது தெளிவாகிவிடும்.
அவர் இப்போது எப்படியிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழும். அவர் வளர்த்து ஆளாக்கிய அமரனுக்குக் குடும்பத்தில் தரப்படுகிற இடம் என்ன என்ற கேள்வி எழும். சக்திவேல் குடும்பம் மட்டுமல்லாமல், அந்த ‘கேங்க்ஸ்டர்’ கும்பல் அமரை எப்படி நோக்குகிறது என்ற எண்ணம் தலை நிமிர்த்தும். Thug Life Movie Review in Tamil
‘ரெட்டை தலை பாம்பு மாதிரி இதுக்கெல்லாம் பதில் சொல்லி, ஒரு கேங்க்ஸ்டர் ட்ராமாவை கிளாசிக்கா மணி சார் மாத்தியிருப்பார்’ என்று எதிர்பார்ப்புடன் இருக்கையில் இருந்து முன்னகர்ந்து அமர்ந்தால், ‘பொளேர்’ என்று நெற்றிப்பொட்டில் அடித்து பின்னுக்குத் தள்ளுகிறது திரைக்கதை. Thug Life Movie Review in Tamil
சந்திரா என்ற பெண் சிவப்பு விளக்கு பகுதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்கிறார் சக்திவேல். அங்கு இந்திராணியை (த்ரிஷா) பார்க்கிறார். ‘நீங்க தேடி வந்த சந்திராவைத்தான் கூட்டிட்டு போவீங்களா. என்ன கூட்டிட்டு போக மாட்டீங்களா’ என்கிறார் இந்திராணி. ‘அவ்ளோதானே’ என்று அவரை அழைத்துச் சென்று தனியே ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். அவருக்குக் காவலாக ஒரு பெண்ணையும் (வடிவுக்கரசி) பணியமர்த்துகிறார்.
அமரனோ சக்திவேலைத் தனது தந்தையாகக் கருதுகிறார். ஆனால், ‘அண்ணே’ என்று விளிக்கிறார். அவரது குடும்பத்தின் நல்லது கெட்டதுகளில் அவரை விட ஒருபடி அதிகமாக அக்கறை காட்டுகிறார். Thug Life Movie Review in Tamil
சக்திவேல் மனைவி ஜீவாவோ (அபிராமி), ‘அந்த வீட்டுக்கு போனேல்ல. இங்க ஏன் வந்த’ என்று சக்திவேலிடம் வீராப்பு காட்டுகிறார். ‘உங்கப்பனை அடிக்கறதுக்காக நான் வந்தப்போ, குறுக்கே நின்று என்னை ஒரு அடி விட்டப்போ விழுந்தவன் தான்’ என்று ’பழங்கதை’ பேசி ஜீவாவின் மண்டையைக் கழுவுகிறார் சக்திவேல்.
இவ்வளவும் சொன்னபிறகு, அந்த சதானந்தும் சாமுவேல் ராயப்பாவும் என்ன ஆனார்கள் என்று சொல்ல வேண்டுமே? Thug Life Movie Review in Tamil
’கேங்க்ஸ்டர் வாழ்க்கை போதும்’ என்று சொல்லி, சதானந்த் அரசியலுக்குத் தாவுகிறார். அதனால், சக்திவேலுடன் சமாதானம் பேச மீண்டும் முயற்சிக்கிறார்.

ஒரு என்கவுண்டரில் குண்டடி பட்டு, படுத்த படுக்கையாகக் கிடக்கிறார் சாமுவேல் ராயப்பா. அவரது ஒரே மகன் ஜெய்யும் (அசோக் செல்வன்) போலீஸ் அதிகாரியாகத்தான் இருக்கிறார். காவல் துறையில் இருக்கிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, சக்திவேல் பின்னணியைத்தான் அவர் குடைவார் என்பதை தமிழ் சினிமா பார்க்கிற குழந்தையும் சொல்லிவிடும். Thug Life Movie Review in Tamil
‘சரி, இப்படியொரு கதையில் முரண் எங்கே இருக்கிறது’ என்று கேட்டால், ‘வரும்.. பொறுங்க..’ என்று சொல்லி நிதானமாகக் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மணி ரத்னம். திரைக்கதை முடிச்சுகள், அது அவிழ்க்கப்படுதல் என்று இரண்டாம் பாதியை நீட்டியிருக்கிறார். Thug Life Movie Review in Tamil
மேற்சொன்ன கதையில் புதிதாக எந்த விஷயங்களும் இல்லை. சுவாரஸ்யம் இருக்கிறதா என்பது அவரவர் முடிவு சார்ந்தது.
முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் கமல், மணி ரத்னம் இணைந்து தந்த ‘நாயகன்’ கூட ‘கேங்க்ஸ்டர்’ கதை தான். நேர்கோடாகக் கதை சொல்லாமல், அதில் ஒரு ரௌடியின் ஐம்பதாண்டு கால வாழ்வு இருந்தது. அந்த கதை சொல்லல் ஒரு கண்ணாடி மாளிகையைக் கவனமாகக் கட்டி எழுப்பியிருக்கும்.
ஏற்கனவே கட்டி வைத்த அந்த மாளிகையின் மீது கல்லெறிந்திருக்கிறது ‘தக் லைஃப்’. ‘இப்படி சல்லிசல்லியா நொறுக்கிட்டீங்களே’ என்று ரசிகர்களான நாம் வருந்துகிற வகையில் இப்படம் அமைந்திருக்கிறது.
அரசு எந்திரம் என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப்படாமல், ‘தளபதி’யில் சூர்யாவும் தேவாவும் அரங்கேற்றுகிற ரவுடித்தனம் பற்றிய கேள்விகள் எல்லாம் இந்த படத்தைப் பார்க்கையில் விஸ்வரூபமெடுக்கின்றன. அந்த படங்களில் நம்மை வாயடைக்கச் செய்த மணி ரத்னம், ‘தக் லைஃப்’பில் எங்கு சறுக்கியிருக்கிறார். அவரே அசை போட வேண்டிய கேள்வி இது.
உயர் தர பொம்மை! Thug Life Movie Review in Tamil
கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், அசோக்செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, ஜோஜு ஜார்ஜ், மகேஷ் மஞ்ச்ரேகர், அலி ஃபசல் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். இன்னும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தணிகலபரணி, பாபுராஜ், பகவதி பெருமாள், வையாபுரி, சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, அர்ஜுன் சிதம்பரம் என்று பலர் இதில் முகம் காட்டியிருக்கின்றனர்.
பெரும்பாலான காட்சிகளில் கமல் தலைகாட்டியிருக்கிறார். மீதமிருக்கிற காட்சிகளில் வந்து போயிருக்கிற அனைவருமே சிறப்பாகத் தோன்றியிருக்கின்றனர்.
ஆனால், ‘உள்ளடக்கம் எப்படி’ என்று கேட்டால் ‘ப்ச்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

கமர்ஷிலாகவும் கலைரீதியிலும் கவனம் ஈர்த்த படங்களின் நாயகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மீண்டும் கைகோர்க்கிறபோது ரசிகர்கள் எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். ஆனால், அந்த படம் கமர்ஷியலாகவும் இருக்காது; கலைரீதியிலும் திருப்தி தராது. ஹாலிவுட், பாலிவுட் என்று நாம் பார்க்கிற எந்த மொழிப் படமானாலும் இது போன்றதொரு அனுபவத்தை எதிர்கொண்டிருப்போம்.
அதைத்தான் ‘தக் லைஃப்’பில் மணி ரத்னம் – கமல் கூட்டணி தந்திருக்கிறது. ஒரு உயர் தர பொம்மையைப் போன்று இத்திரைப்படத்தை அமைத்திருக்கிறது.
மேலே சொன்னவாறு இதில் நடிகர் நடிகைகளின் சிறப்பான ‘பெர்பார்மன்ஸ்’ இருக்கிறது. ஒவ்வொரு பிரேமும் உலகத்தரம் என்று சொல்கிற வகையில் ஒளிப்பதிவை அமைத்திருக்கிறார் ரவி கே.சந்திரன்.
ஒளிப்பதிவாளர் சுற்றிச் சுழன்றாடுகிற வகையில் தயாரிப்பு வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் ஷர்மிஸ்தா ராய்.
ஒவ்வொரு காட்சியையும் அதன் தன்மைக்கு ஏற்றவாறு தொகுத்திருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.
இன்னும் சண்டைப்பயிற்சி, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று எல்லாமே வியக்கத்தக்க அளவில் திரையில் இடம்பெற்றிருக்கிறது.
சரி, அதனால் கதைக்கும் காட்சி வடிவாக்கத்திற்கும் என்ன லாபம் என்று கேட்டால் எந்தப் பதிலும் கிடைக்காது.
இப்படியொரு உள்ளடக்கதிற்குத் தன் இசையால் உயிர் கொடுக்க முயன்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். வழக்கத்திற்கு மாறான பின்னணி இசை அனுபவத்தை ரசிகர்கள் பெறட்டும் என்று உழைத்திருக்கிறார். ஆனாலும், ’உயர்தர பொம்மையாகவே’ காட்சி தருகிறது ‘தக் லைஃப்’.
சரி, ஏ.ஆர்.ஆர். தந்த 9 பாடல்களையாவது திரையில் பார்த்து மகிழலாம் என்றால் மணி ரத்னம் அதற்கும் இடம் தரவில்லை. ஜிங்குச்சா, சுகர் பேபி, ஓ மாறா பாடல்களின் தொடக்கம் தான் காதில் விழுகின்றன. அதன்பிறகு அவற்றை ரசிக்கிற மனநிலை மறைந்து போகிறது.
அத்தனை பாடல்களிலும் இரண்டுக்கும் மேற்பட்ட காட்சிகள் தலைநீட்டுகின்றன. அதனால், அவை பின்னணியில் ஒலிக்கின்றன; பாதியிலேயே மங்கிவிடுகின்றன.
‘விண்வெளி நாயகா’ பாடல் கிளைமேக்ஸில் வரும் டைட்டிலில் ஒலிக்கிறது. ‘முத்த மழை பாடலை தீ பாடியிருக்க வேண்டுமா? சின்மயி பாடியிருக்க வேண்டுமா’ என்ற விவாதத்திற்கான பதிலை அறியலாம் என்று பார்த்தால், அந்த பாடல் படத்திலேயே இல்லை.
‘நியூ’வில் வரும் ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா’ மாதிரியான ரசிகர்கள் நினைவில் இடம்பெறத் தக்க ஒரு பாடலாக ‘அஞ்சு வண்ண பூவே’ அமைந்திருக்க வேண்டும். ‘எனக்கு செண்டிமெண்ட்ல நம்பிக்கை இல்லைங்க’ என்று அதனைப் புறந்தள்ளியிருக்கிறார் மணி ரத்னம்.

சில நிறைகள் ‘தக் லைஃப்’பில் உண்டு. க்ளோஸ் அப்’ ஷாட்களில் தலைகாட்டியிருக்கும் அனைத்து நடிகர், நடிகையரும் தமது திறமையை ‘பளிச்’சென்று காட்டியிருக்கின்றனர். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்காக மட்டுமே படம் பார்க்க வருபவர்களுக்கு ‘தக் லைஃப்’ நல்லதொரு அனுபவத்தைத் தரும்.
போலவே, ‘மணி சாரும் கமல் சாரும் சேர்ந்து சீனிகம் மாதிரி ஒரு ரொமான்ஸ் படம் பண்ணலாமே’ என்று சொல்ல வைக்கின்றன சில காட்சிகள்.
அதே நேரத்தில், இந்த ஜாம்பவான்கள் பட்டாளம் இப்படிப்பட்ட லாஜிக் மீறல்களுக்கு இடம் தந்திருக்கிறதே என்றும் எண்ண வைக்கின்றன சில காட்சிகள். அவை ‘க்ளிஷேக்களின் உச்சம்’ எனலாம்.
தன்னைத் தொடர்ந்து வந்த ரவுடிகள் வீட்டு வாசலில் காத்துக் கிடக்க, அதற்கடுத்த காட்சியில் ரயில் நிலையத்திற்குச் சென்று அவர்களை கமல் பாத்திரம் பந்தாடுகிற காட்சி அதற்கொரு உதாரணம். இது போன்ற லாஜிக் மீறல்கள், ‘என்ன மணி சார் இது’ என்று கேட்க வைக்கின்றன.
ஒட்டுமொத்தத்தில் ‘நாயகனைத் தாண்டி நிற்கிற ஒரு கிளாசிக்கான கேங்க்ஸ்டர் படத்தைப் பார்க்க வேண்டும்’ என்று தியேட்டருக்கு வருபவர்களைத் தலையில் தட்டி உட்கார வைக்கிறது ’தக் லைஃப்’. அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பவர்களுக்கும், கமல் – மணி காம்பினேஷனை எப்படி மிஸ் செய்வது’ என்பவர்களுக்கும் இப்படம் பிடிக்கக்கூடும்..!