சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்!

Published On:

| By Selvam

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 9) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்தார்.

இவர் தனது பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரணை மேற்கொண்டு வந்தது.

முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு சித்ரா ராமகிருஷ்ணா பதவி வழங்கியதாக செபி குற்றம்சாட்டியது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி இவர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செல்வம்

’எஸ்எஸ்எல்வி -டி2’: முதல் தோல்வியால் இஸ்ரோ விஞ்ஞானிகளின் முடிவு!

நாடாளுமன்ற உரை: கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share