திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு போட்டியிட்டு 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தை தோற்கடித்தார்.
இந்த நிலையில் எ.வ. வேலு வெற்றிக்கு எதிராக அருள் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலு சார்பில் நிராகரிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று (செப்டம்பர் 16) நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிபதி அருள் ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
முன்னதாக, தவெக எம்எல்ஏ இளையராஜா, பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜினாமா செய்த ஜெயக்குமார், கோபிசெட்டிப்பாளையம் எம்எல்ஏவும் அமைச்சருமான செங்கோட்டையன், கோவை தெற்கு திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
