வேலை செய்யும் மக்களின் வாழ்வில் கிரெடிட் கார்டுகளின் (Credit Card) முக்கியத்துவமும் அவசியமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிரெடிட் கார்டு மூலம் உங்களிடம் பணம் இல்லாத சூழலிலும் நீங்கள் பொருட்களை வாங்கலாம் மற்றும் பல்வேறு சேவைகளைப் பெறலாம். கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துபவர்களுக்கு, அவை ஒரு வரப்பிரசாதம். இருப்பினும், கிரெடிட் கார்டை நீங்கள் சரியாகப் பயன்படுத்தாமலும், உங்கள் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தாமலும் இருந்தால், அதுவே ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.
கிரெடிட் கார்டு கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால் காவல்துறை கைது செய்யுமா?
உங்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தாமல் இருப்பது கடுமையான நிதிப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் காவல்துறை உங்களைக் கைது செய்வதில்லை. உண்மையில், கிரெடிட் கார்டு கட்டணத்தைச் செலுத்தாமல் இருப்பது ஒரு கடன் தொடர்பான தவறு ஆகும். மேலும் அது தொடர்பான தகராறுகள் உரிமையியல் சட்டத்தின் கீழ் வருகின்றன.உங்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தாமல் போனால் பல தீமைகள் உள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
கட்டணங்களைச் செலுத்தாததால் ஏற்படும் இழப்புகள்:
உங்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தத் தவறினால் அது முதலில் உங்கள் கடன் மதிப்பீட்டைப் பாதிக்கும். ஒரு மோசமான கடன் மதிப்பீடு, எதிர்காலத்தில் எந்த வகையான கடனையும் பெறுவதைக் கடினமாக்கும். மேலும், ஒரு மோசமான கடன் மதிப்பீடு மற்றொரு கிரெடிட் கார்டைப் பெறுவதை சாத்தியமற்றதாக ஆக்கும். உங்கள் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் அது உங்களைப் பிளாக் லிஸ்ட் செய்வது மட்டுமல்லாமல், உங்கள் கார்டையும் முடக்கி அதைப் பயன்படுத்த விடாமல் தடுக்கும்.
நிலுவையில் உள்ள கட்டணங்களுக்கு அதிக வட்டி:
கிரெடிட் கார்டுகள் கணிசமான வசதியை வழங்குகின்றன. இருப்பினும், உங்கள் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்றால் வங்கி உங்கள் நிலுவைத் தொகைக்கு அதிக வட்டியை வசூலிக்கத் தொடங்கும். இது திருப்பிச் செலுத்துவதை மேலும் மேலும் கடினமாக்கும். மேலும், வங்கி நிலுவைத் தொகையை வசூலிக்க மீட்பு முகவர்களை அனுப்பும். இது சமூகத்தில் உங்கள் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தலாம். கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் வங்கி உங்களுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்யும்.
வங்கிகள் உங்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யலாம்:
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த பிறகும் வங்கியால் நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாதபோது, அது இறுதியில் உங்கள் சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம். உங்களுக்கு சேமிப்புக் கணக்கு அல்லது வேறு ஏதேனும் கணக்கு உள்ள வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் நீங்கள் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் அந்த வங்கி உங்கள் கணக்கில் உள்ள நிதியைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்தும்.
