அமிதாப் துபே Failure of Modis Foreign Policy 2025
சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் “கட்டிப்பிடி வைத்தியம்” உரிய பலனை அளிக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 2010 G7 உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி, “இந்தியப் பிரதமர் பேசும்போது, அனைவரும் அவரைக் கூர்ந்து கவனிப்பார்கள்” என்று கூறினார். மோடியும் பலமுறை இந்த உச்சி மாநாடுகளில் கலந்துகொண்டிருந்தாலும், மோடி பேசுவதைக் கவனித்துக் கேட்க ஆளில்லை போல் தெரிகிறது.
கடந்த சில வாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சர்வதேசச் சமூகமும் இந்தியாவை நடத்திய விதத்தைக் கவனியுங்கள்:
ஏப்ரல் 22இல் நடந்த பயங்கரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களைத் தண்டிக்க இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையைத் தொடங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு, தான் இந்தியா – பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும், போர்நிறுத்தத்திற்கு இணங்குமாறு இந்தியாவைக் கட்டாயப்படுத்தியதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
அதன் பிறகு, அமெரிக்க அதிபர் 15 முறைக்கும் குறையாமல் போரை நிறுத்தியதற்கான பெருமையைக் கோரினார். ஜூன் 17 அன்று மோடி, டிரம்ப் இடையே நடந்த அழைப்பு குறித்த ஒரு பத்திரிகை அறிக்கை, எந்தவித மத்தியஸ்தமும் இல்லை என்று கூறியது. ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறினார். Failu

re of Modis Foreign Policy 2025
பாகிஸ்தான் இந்தியா மீது ஏவுகணைகளையும் டிரோன்களையும் ஏவிக்கொண்டிருந்தபோது, சர்வதேச நாணய நிதியம் (IMF) மே 9 அன்று பாகிஸ்தானுக்கு $1 பில்லியன் நிதியை விடுவித்ததுடன், $1.4 பில்லியன் புதிய கடனுக்கும் ஒப்புதல் அளித்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவாவிடம் இந்த நிதியை நிறுத்தி வைக்குமாறு நேரடியாகக் கோரியபோதிலும் இது நடந்தது. இந்தியாவின் ஆட்சேபணைகளை மீறி ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஜூன் 3 அன்று பாகிஸ்தானுக்கு $800 மில்லியனை விடுவித்தது.

பல நாடுகளைக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) ஜூன் 16 அன்று கூடி, பாகிஸ்தானை “ஐயத்துக்குரிய நாடுகளின் பட்டியலில்” (grey list) சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்தது. 2008, 2012, 2018ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. FATFவின் இந்தப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்த்திருந்தால் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்கான செலவை அந்நாட்டினால் தாக்குப்பிடிக்க முடியாமல்போயிருக்கும். பாகிஸ்தான் மீது கடுமையான பொருளாதாரச் சுமை ஏறியிருக்கும். அதன் பிரதேசத்தில் செயல்படும் எல்லை தாண்டிய பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு எதிராக மேலும் நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க அது கட்டாயப்படுத்தப்பட்டிருக்கும்.

கடைசியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி “ஃபீல்ட் மார்ஷல்” அசிம் முனீர் (பஹல்காமின் சூத்திரதாரி என்று இந்தியா சந்தேகிக்கும் நபர்), அண்மையில் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் மதிய உணவு அருந்தினார். ஈரானைப் பற்றி உரையாடியதாகச் சொல்லப்பட்டது.
மோடியின் மேற்கத்திய உத்தி பலனளிக்கவில்லை
மோடி “உண்மையான நண்பர்” என்று வர்ணித்த ஒருவரின் நடவடிக்கைகள் இவை. உலக அரசியலில் உண்மையான நண்பர்கள் என்று யாரும் இல்லை என்பதுதான் உண்மை. உதவிகரமாக இருக்கக்கூடிய மேற்கத்தியக் குழு ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்தியா இப்போதைக்கு அங்கு நுழைய வாய்ப்பில்லை.
வெளிப்படையாகச் சொல்வதென்றால், மேற்கத்திய அங்கீகாரத்திற்காக ஏங்குவது, அதே வேளையில் அதற்கு அப்பாற்பட்டவர் போல் பாசாங்கு செய்வது மிகவும் சங்கடமானது. இதை மோடி நிறையவே செய்கிறார். Failure of Modis Foreign Policy 2025
அவர் இந்தியாவை மேற்கத்தியச் சுற்றுப்பாதையில் செலுத்தியிருந்தாலும், சீனா-பாகிஸ்தான் கூட்டணியுடன் மெல்ல அதிகரித்துவரும் மோதலில் இது நமக்கு எப்படி உதவும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு நேர்மாறாக, பிரதமர் இந்திரா காந்தி, இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் ஏழ்மை நிரம்பிய, பலவீனமான இந்தியாவைத் திறமையாகவும் சுயமரியாதையுடனும் வழிநடத்தினார்.

Failure of Modis Foreign Policy 2025
ஃபாரின் அஃபயர்ஸ் (Foreign Affairs) இதழில் அண்மையில் வெளியான ஒரு கட்டுரையில், “இந்தியாவின் பெரு-அதிகாரக் கற்பனைகள்” (India’s Great-Power Delusions) என்ற தலைப்பில், 2005 அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஆஷ்லே டெல்லிஸ், இந்தியாவின் தற்போதைய 6 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வைத்துப் பார்க்கையில், 2047ஆம் ஆண்டளவில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பின்னால் மிகத் தொலைவில் நான்காவது இடத்தில் மட்டுமே இருக்கும் என்று எழுதினார். மோடியின் பிளவுபடுத்தும் இந்துத்துவச் சித்தாந்தம், இந்தியாவை மேலும் பிளவுபடுத்திப் பலவீனப்படுத்துகிறது என்றும் அவர் மேலும் கூறினார். Failure of Modis Foreign Policy 2025
அடுத்த பத்தாண்டுகளில் சீனாவைச் சமநிலைப்படுத்த வேண்டும் என்றால் இந்தியா பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டும் உள்நாட்டு நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும். Failure of Modis Foreign Policy 2025
உற்பத்தித் துறையில் கூர்மையான கவனத்தைச் செலுத்த வேண்டும். ஆப்பிள் இந்தியாவில் தொலைபேசிகளை அசெம்பிள் செய்வதால் இந்தியாவின் உற்பத்தித் துறை செழித்து வளர்கிறது என்று மோடி வாக்காளர்களின் ஒரு பிரிவினரை நம்பவைத்துள்ளார். இதில் உள்நாட்டு உள்ளடக்கம் வெறும் 20 சதவீதம் மட்டுமே பெரும்பாலான பாகங்கள் சீனாவிலிருந்து வருகின்றன என்பது ஒருபுறமிருக்க, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் உற்பத்தி மதிப்புக் கூட்டல் 212 சதவீதம் அதிகரித்து ரூ. 15.6 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆனால் மோடியின் முதல் பத்து ஆண்டுகளில் வெறும் 176 சதவீதம் அதிகரித்து ரூ. 27.5 லட்சம் கோடியாக மட்டுமே அதிகரித்துள்ளது. ஆப்பிள், சாம்சங் ஆகியவை இந்தியாவில் அசெம்பிள் செய்யும் தொலைபேசிகளுக்குக் “குறைந்தபட்சம் 25 சதவீதம்” வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியதிலிருந்து அமெரிக்காவைச் சார்ந்திருப்பதன் பயனற்ற தன்மை தெளிவாகிறது.

திறன் மேம்பாட்டில் சில மூலோபாய நன்மைகளுடன் அமெரிக்காவைச் சார்ந்திருப்பது இந்தியாவுக்குப் பெரிதாக எந்த நன்மையையும் செய்துவிடவில்லை. டிரம்பிற்கு அடிபணிவதைக் குறுகிய காலத் தேவை என்று மோடி ஆதரவாளர்கள் வாதிடலாம். சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவது போன்றவற்றுக்கு இது தேவை என்றும் சொல்லலாம். ஆனால் அமெரிக்காவுடன் நெருங்குவது, இந்தியா ஒரு உற்பத்தி மையமாக மாறுவதற்கு அமெரிக்கா தரும் ஆதரவைப் பொறுத்தது. சீனாவுடனான போட்டியில் அமெரிக்கா இந்தியாவைச் சதுரங்கக் காயாகப் பயன்படுத்த விரும்பினால், அது நமக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். Failure of Modis Foreign Policy 2025
இந்தியா அமெரிக்காவிடம் கோர வேண்டியது என்ன?
அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் இந்தியா தனக்கான முடிவுகளை எடுப்பதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு மதிப்பளித்தன. இந்திய தேசிய காங்கிரசும் கோடிக்கணக்கான இந்தியர்களும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காகப் போராடியது, அமெரிக்க அல்லது சீன புதிய காலனித்துவத்தில் சிக்குவதற்காக அல்ல. உள்நாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும் உள்நாட்டில் மக்களிடையே பிளவைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துவதுதான் இந்தியாவின் தற்சார்பையும் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும். இதில் கவனம் செலுத்தினால் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் மற்ற பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு இருந்தாலும், அடிப்படை விஷயங்களில் ஒத்துழைக்க முடியும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தவறான கற்பிதங்களாலும் சுயமோகத்தாலும் வடிவமைக்கக் கூடாது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்துவரும் தீவிரமான போட்டிக்கு மத்தியில், மோடி அரசு எதிர்க்கட்சிகளுடனும் அனுபவம் உள்ளவர்களுடனும் கலந்தாலோசித்துச் சர்வதேச வியூகம் வகுக்க வேண்டும். காங்கிரஸ் கொள்கைகளை எடுத்துக்கொண்டு அவற்றுக்கு மறுபெயரிட்டுப் பயன்படுத்தும் மோடி, இந்த சவாலான காலங்களுக்குப் பொருத்தமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் காங்கிரசின் உதவியைப் பெறலாம். பிரதமர் அண்மையில் உலகளாவிய தொடர்புகளுக்கு எதிர்க்கட்சி எம்.பி க்களைப் பயன்படுத்தியிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையைக் கேட்பதில் தவறில்லையே.

அரசு எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும். தனியார் முதலீட்டையும் பொது நிறுவனங்களையும் பயன்படுத்தி எதிர்க்கட்சியைகளையும் நாட்டின் நிறுவனங்களையும் பலவீனப்படுத்தும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். ஆபரேஷன் சிந்தூர், அதன் விளைவுகள் இரண்டையும் விவாதிக்க ஒரு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவதும் அவசியம். Failure of Modis Foreign Policy 2025
மோடியை உலகம் உண்மையிலேயே மதிக்கிறதா எனபது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியா உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற வேண்டும் எனபதுதான் முக்கியம். Failure of Modis Foreign Policy 2025
அமிதாப் துபே, காங்கிரஸ் உறுப்பினர்.
நன்றி: தி பிரிண்ட் இணைய இதழ்