தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
ஒட்டன்சத்திரம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ஒட்டன்சத்திரம் தொகுதி.., அமைச்சர் சக்கரபாணியின் தொகுதி என்று சொல்வதை விட கோட்டை என்று சொல்லலாம்.
1996-ல் இருந்து தொடர்ந்து இங்கே அமைச்சர் சக்கரபாணி வெற்றி பெற்று வருகிறார். 2021 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நடராஜை 28,742 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சக்கரபாணிக்கு எதிராக இதுவரை அதிமுகதான் போட்டியிட்டுள்ளது.
இந்த முறை அதிமுகவின் கூட்டணி கட்சியான தமாகாவுக்கு ஒட்டன்சத்திரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமாகாவின் விடியல் சேகர் இங்கே போட்டியிடுகிறார். தேர்தல் களங்களை சந்தித்த அனுபவம் கொண்டவர் விடியல் சேகர்.
தவெக சார்பில் மோகன், நாதக சார்பில் ரகுபதி ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக-49%
அதிமுக-30%
தவெக-15%
நாதக-5% வாக்குகள் பெறும்
திமுக அமைச்சர் சக்கிரபாணி லீடிங்கில் இருக்கிறார். மீண்டும் அவர் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
