டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை குழுவில் எம்.பி திருச்சி சிவாவின் பெயர் புதிதாக இன்று (ஜனவரி 19) சேர்க்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் இன்று (ஜனவரி 19) ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு என 3 குழுக்கள் அறிவிக்கப்பட்டன.
இதில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு தலைவராக திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர். பாலுவை பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
மேலும் உறுப்பினர்களாக கே.என்.நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டனர்.
திமுக சார்பில் இன்று அறிவிக்கப்பட்ட 3 குழுவிலும், கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை.
இதுகுறித்து கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது டி.ஆர்.பாலு தலைமையிலான கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை குழுவில் எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் சேர்க்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்ட நிலையில், உறுப்பினர்களாக அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, எம்.பி.,க்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்.எம்.அப்துல்லா, எம்.எல்.ஏக்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், எழிலன் நாகநாதன், கட்சி நிர்வாகிகளான டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், கோவி.செழியன் மற்றும் மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கனிமொழி தலைமையில் மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!
மக்களவை தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் உதயநிதி ஸ்டாலின்
நான் நேரில் பார்த்த “ஜாவா சுந்தரேசன்” மீனாட்சி சவுத்ரி: கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி
ஊழியர்களை பணிநீக்கம் செய்யும்… உலகின் முன்னணி நிறுவனங்கள்… காரணம் என்ன?