கோவை- திண்டுக்கல்- நாகர்கோவில் செல்லும் ரயில் பயணிகளின் கனிவான கவனத்துக்கு!

Published On:

| By Mathi

Train Services

கோவையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக நாகர்கோவில் செல்லும் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Dindigul Coimbatore Nagercoil

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிப்பட்டி- சோழவந்தான் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்,

  • கோவை- நாகர்கோவில் இடையேயான 16322 எக்ஸ்பிரஸ் ரயிலானது ஜூலை 1, ஜூலை 2 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். ஜூலை 1, ஜூலை 2 ஆகிய இரு நாட்களிலும் 16322 எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படமாட்டாது.
  • அதே நேரத்தில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜூலை 1-ந் தேதி மாலை 3.45 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லக் கூடிய அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் நின்று செல்லும். இவ்வாறு சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share