பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) 1205 நாள் சிறப்பு நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit) திட்டம், சிறந்த வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடுகளை நாடும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றது. இன்று இந்தத் திட்டத்தில் ரூ.1,25,000 தொகையை மொத்தமாக டெபாசிட் செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால், முதிர்வு காலத்தில் நீங்கள் எவ்வளவு பெறுவீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
PNB வங்கி பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குவதால், வருமானக் கணக்கீடுகள் மாறுபடும். 1205 நாட்களுக்குப் பிறகு உங்கள் அசல் தொகையில் எவ்வளவு வட்டி ஈட்டுவீர்கள் மற்றும் உங்கள் மொத்த செல்வம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
வட்டி விகிதம்:
வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, PNB தற்போது தனது 1205 நாள் நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 6.60 சதவீதம் மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கு 6.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
வருமானக் கணக்கீடு:
PNB FD கால்குலேட்டரின்படி, ஒரு சராசரி வாடிக்கையாளர் இன்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் 1205-நாள் FDயில் ரூ.1,25,000 டெபாசிட் செய்தால் முதிர்வு காலத்தில் அவரிடம் மொத்தமாக ரூ.152,654 இருக்கும். அவர் ரூ.27,654 வருமானமாகப் பெறுவார். இதேபோல், நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக (60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்) இருந்து, PNB வங்கியின் 1205நாள் FDயில் ரூ. 125,000 டெபாசிட் செய்தால், கணக்கீடுகளின்படி முதிர்வு காலத்தில் மொத்தமாக ரூ. 155,155 பெறுவார். இந்த டெபாசிட்டில் நீங்கள் ரூ.30,155 வருமானமாகப் பெறுவீர்கள்.
நீங்கள் ஒரு சூப்பர் சீனியர் குடிமகனாக இருந்தால், இந்த டெபாசிட்டில் நீங்கள் மொத்தமாக ரூ. 31,674 வருமானமாகப் பெறுவீர்கள். முதிர்வு காலத்தில் உங்களிடம் ரூ.156,674 இருக்கும். நிலையான வைப்புநிதிகளில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி பொதுவாக உண்டு. ஆனால் அதற்கு அபராதம் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த அபராதம் நீங்கள் ஈட்டும் மொத்த வட்டியைக் குறைத்துவிடும். எனவே முதலீடு செய்வதற்கு முன் இந்த நிபந்தனையைப் புரிந்துகொள்வது அவசியம்.
மேலும், நிலையான வைப்புநிதிகளில் ஈட்டப்படும் வட்டிக்கு முழுமையாக வரி விதிக்கப்படும். ஒரு நிதியாண்டில் உங்கள் வட்டி வருமானம் ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டினால், வங்கி TDS-ஐயும் பிடித்தம் செய்யும்.
