சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் இன்று (ஏப்ரல் 10) காவல் ஆணையர் அருண் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ள அருண் தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் ஈடுபட மாட்டார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக காவல் ஆணையர் அருண் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
