பிஹைண்ட் வுட்ஸ் நிறுவனத்தின் ‘மாதவி’ குறும்படம் வாயிலாக, ‘யார் இது’ என்று ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஆர்த்திகா. தமிழில் குறிப்பிட்ட மதம் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியே கவனம் ஈர்த்தவர். ஆனாலும், மாதவி குறும்படத்திற்குப் பிறகு காணாமல் போனவரை மீண்டும் வெளிச்சத்திற்கு அழைத்து வந்தது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கார்த்திகை தீபம்’.
அந்த தொடரின் நாயகனான கார்த்திக் ராஜ் உடன் இணைந்து ‘பிளாக் அண்ட் ஒயிட்’ எனும் திரைப்படத்தில் நடித்தார் ஆர்த்திகா. ’தீ இவன்’ என்ற படத்தில் ஹேமந்த் ஜோடியாகத் தோன்றினார். Arthika Upcoming new serial
காந்தக் கண்கள், வட்ட முகம், அலட்டல் உடல்மொழி, பக்குவத்தை வெளிப்படுத்துகிற தோரணை என்றிருக்கிற ஆர்த்திகாவின் தோற்றத்தோடு சிறப்பான நடிப்பும் கலந்திருந்தது ரசிகர்களை ஈர்த்தது. மேற்சொன்ன சீரியல், சினிமா தவிர்த்து ‘இட்ஸ் மீ ஆர்த்திகா’ என்ற பெயரில் சமூகவலைதளங்களில் அவ்வப்போது வீடியோக்கள் வெளியிடுவது இவரது பொழுதுபோக்கு. Arthika Upcoming new serial
’அதற்கென்ன’ என்கிறீர்களா? சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கியிருக்கிறார் ஆர்த்திகா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிற ‘வினோதினி’ சீரியலில் நாயகியாக நடிக்கிறார். இத்தொடர் வரும் திங்கட்கிழமை முதல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

’மாமியாரைத் தாயாக எண்ணுகிற ஒரு மருமகள்’ என்று தொடங்குகிறது இதன் டீசர். மகன், மகளுடன் வாழும் இவர்களை விட்டுவிட்டு கணவர் எங்கு சென்றார் எனத் தெரியாது. அப்படிப்பட்ட சூழலில், அவரது வரவை எதிர்பார்த்துக் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகிற பெண்ணாக இதில் வருகிறாராம் ஆர்த்திகா. தையல் தைக்கிற பெண்ணாக அவர் தோன்றுவது புதிய பின்னணியைக் காட்டும் என்று நம்பலாம்.
போலவே, மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்கிற கணவராக வருகிறாராம் கிருஷ்ணா. இவர் ஒரு மகளை வளர்த்து வருகிறார்.
சின்னத்திரை ரசிகர்களை ஈர்க்கிற கதை என்றபோதும், தொடர்ந்து ஆர்த்திகாவைப் பார்க்கிற வகையில் இத்தொடர் அமைய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ‘வினோதினி’ அப்படியொரு வரவேற்பை உருவாக்குமா?