நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழக எல்லையை ஒட்டி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் நிலம்பூர் பகுதி உள்ளது. இங்கு கருவார குண்டு பகுதியில் சில தினங்களுக்கு முன் 3 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. 3 Wild elephants rampage in Kerala video viral
இதைத்தொடர்ந்து 3 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து 3 யானைகளும் சாலையில் ஓட தொடங்கின. அதில் ஒரு யானை எதிரே வந்த மினி லாரி வாகனத்தை ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் வாகனம் லேசாக சேதம் அடைந்தது.
பின்னர் 3 யானைகளும் அருகில் இருந்த தோட்டத்திற்குள் சென்றன. அதிர்ஷ்டவசமாக மினி லாரியில் இருந்த வாகன ஓட்டுனர் உயிர் தப்பினார். இந்த நிலையில் யானைகள் மினி லாரியை தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
