நீரஜ் சோப்ராவை விரட்டும் நெட்டிசன்கள்… ஆதங்கப்பட்ட பிரபலம்!

Published On:

| By christopher

yogeswar dutt supports neeraj chopra

‘நீரஜ் சகோதரரே, உங்கள் தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை’ என சோப்ராவுக்கு ஆதரவாக பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் குரல் கொடுத்துள்ளார்.

ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் கடந்தாண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. yogeswar dutt supports neeraj chopra

இவர் வரும் மே 24-ம் தேதி பெங்​களூரு​வில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார்.

இந்த போட்​டி​யில் பங்​கேற்க பாரிஸ் ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற பாகிஸ்​தானைச் சேர்ந்த அர்​ஷத் நதீ​முக்​கு அழைப்பு விடுத்​திருந்​தார் நீரஜ் சோப்ரா. ஆனால் மே 22-ம் தேதி தென் கொரி​யா​வில் நடை​பெற உள்ள ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப் தொடரில் பங்​கேற்க உள்​ள​தால் தன்​னால் கலந்து​கொள்ள முடி​யாது என்று அர்​ஷத் நதீம் நிராகரித்தார்.

yogeswar dutt supports neeraj chopra

இதற்கிடையே கடந்த 22ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்​காமில் உள்ள சுற்​றுலாதலத்​தில் தீவிர​வா​தி​கள் நடத்​திய துப்​பாக்​கிச் சூடு தாக்​குதலில் 2 வெளி​நாட்​டினர் உட்பட 26 பேர் கொல்​லப்​பட்​டனர். இது நாடு முழு​வதும் பெரும் அதிர்​வலையை ஏற்​படுத்​தி​யது.

இந்த சூழலில் பாகிஸ்​தானைச் சேர்ந்த அர்​ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்​ததை அடுத்து அவரது தேசப்பற்று குறித்து சமூக வலை​தளங்​களில் சிலர் கடுமை​யாக விமர்​சித்​தனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் நீரஜ். அதில், “கிளாசிக் போட்​டி​யில் பங்​கேற்க அர்​ஷத் நதீ​முக்கு நான் அழைப்பு விடுத்​தது குறித்து அதி​கம் பேசப்​படு​கிறது, அதில் பெரும்​பாலானவை வெறுப்பு மற்​றும் துஷ்பிரயோக​மாக உள்​ளது. என் குடும்​பத்​தைக் கூட அவர்​கள் விட்​டு​வைக்​க​வில்​லை.

அர்​ஷத்​துக்கு நான் விடுத்த அழைப்பு ஒரு தடகள வீரரிட​மிருந்து மற்​றொரு விளை​யாட்டு வீரருக்கு சென்​றது. பஹல்​காமில் தீவிர​வாத தாக்​குதல் நடை​பெறு​வதற்கு இரண்டு நாட்​களுக்கு முன்பு போட்டிகளில் பங்கேற்க வரு​மாறு அனைத்து விளை​யாட்டு வீரர்​களுக்​கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தீவிர​வாத தாக்​குதலில் தங்களது உறவினர்களை இழந்து தவிப்​பவர்​களு​டன் எனது எண்​ணங்​களும் பிரார்த்​தனை​களும் உள்​ளன. நடந்த சம்​பவத்​தால் ஒட்​டுமொத்த தேசத்​துட​னும் சேர்த்து நானும் காயமும் கோப​மும் அடைகிறேன். எனது நாடும் அதன் நலன்​களும் எப்​போதும் முதன்​மை​யாக இருக்கும். நம் நாட்​டின் பதில், ஒரு தேச​மாக நமது வலிமை​யைக் காண்​பிக்​கும் மற்றும் நீதி வழங்கப்படும் என்று நம்​பு​கிறேன்.

பல ஆண்​டு​களாக எனது நாட்டை பெரு​மை​யுடன் சுமந்து வரு​கிறேன், எனவே எனது நேர்மை கேள்விக்​குள்​ளாக்​கப்​படு​வதைப் பார்ப்​பது வேதனையளிக்​கிறது. எந்​தக் காரண​மும் இல்​லாமல் என்னை​யும் என் குடும்​பத்​தை​யும் குறிவைக்​கும் மக்​களிடம் நான் விளக்க வேண்​டி​யிருப்​பது எனக்கு வேதனையளிக்​கிறது.

நாங்​கள் எளிய மக்​கள், தயவுசெய்து எங்​களை வேறு எது​வாக​வும் காட்ட வேண்​டாம். ஊடகங்​களின் சில பிரிவு​கள் என்​னைச் சுற்றி பல தவறான கதைகளை உரு​வாக்​கி​யுள்ளன, ஆனால் நான் பேசவில்லை என்​ப​தால், அது உண்​மை​யாகி​வி​டாது. மக்​கள் எவ்​வாறு கருத்துக்​களை மாற்றுகிறார்கள் என்​ப​தைப் புரிந்​து​கொள்​வதும் எனக்கு கடின​மாக உள்​ளது” என நீரஜ் தெரிவித்திருந்தார்.

எனினும் அவருக்கு எதிராக சிலர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற முன்னாள் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ”நீராஜ் சகோதரரே, நீங்கள் உங்கள் தேசபக்தியை யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை. வெளிநாட்டு மண்ணில், மூவர்ணக் கொடியை உயர்த்தி, தங்கள் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்கள் விளையாட்டு வீரரும், ராணுவ வீரரும் தான்.

தேசத்தின் மீது எந்தவித அக்கறையும் இல்லாமல், அற்ப மனப்பான்மை கொண்ட நபர்கள் தான் இப்படி முட்டாள்தனமான விமர்சனம் செய்வர். நீங்கள் சாம்பியன். நாட்டின் பெருமை” என யோகேஸ்வர் தத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share