கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர் பகல்ஹாமில் நடந்த தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. rajinikanth says kashmir attackers
இந்தநிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “காஷ்மீரில் நடந்த தீவிரவாத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியிருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்பதற்காகவே, இதுபோன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அதனால் கண்டிப்பாக இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களையும் எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்று இனிமேல் கனவில் கூட யாரும் நினைத்துப் பார்க்கக் கூடாது” என்று தெரிவித்தார். rajinikanth says kashmir attackers