சைலண்ட் ஹிட்… ‘துடரும்’ படத்திற்கு குவியும் பாராட்டு: மோகன்லால் நெகிழ்ச்சி!

Published On:

| By christopher

mohan lal thanked fans for thudarum response

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிப்பில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த மாதம் வெளியானது மாஸ் கமர்ஷியல் திரைப்படமான ’எம்புரான்’. அப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள திரையுலகில் புதிய சாதனை படைத்தது. mohan lal thanked fans for thudarum response

அதனையடுத்து எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மோகன்லால் நடிப்பில் நேற்று (ஏப்ரல் 25) வெளியாகி உள்ளது ’துடரும்’ திரைப்படம்.

ADVERTISEMENT

தருண்மூர்த்தி இயக்கத்தில் ஷோபனா, பினு பப்பு, பிரகாஷ் வர்மா, ஷாஜி குமார், ஜேக்ஸ் பெஜாய் என பலரும் நடித்துள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு க்ரைம் திரில்லராக வெளிவந்துள்ள இத்திரைப்படம், இரண்டு நாளில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது எனவும், ரசிகர்களின் வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் சாக்னில்க் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் மோகன்லால்.

அவர், “துடரும் படத்திற்கான அன்பு மற்றும் மனமார்ந்த பதிலால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். உண்மையிலேயே பணிவுடன் இருக்கிறேன்.

ADVERTISEMENT

ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பாராட்டு வார்த்தையும் என்னால் முழுமையாக வெளிப்படுத்த முடியாத வழிகளில் என்னைத் தொட்டுள்ளன.

இந்தக் கதைக்கு உங்கள் இதயங்களைத் திறந்ததற்கும், அதன் ஆன்மாவைப் பார்த்ததற்கும், அதை இவ்வளவு கருணையுடன் ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி.

இந்த நன்றியுணர்வு என்னுடையது மட்டுமல்ல. இந்த பயணத்தில் என்னுடன் பயணித்து, ஒவ்வொரு பிரேமிலும் தங்கள் அன்பையும், முயற்சியையும், உணர்வையும் அளித்த ஒவ்வொருவருக்கும் இது சொந்தமானது.

ரெஞ்சித் எம், தருண் மூர்த்தி, கே.ஆர். சுனில், ஷோபனா, பினு பப்பு, பிரகாஷ் வர்மா, ஷாஜி குமார், ஜேக்ஸ் பெஜாய் மற்றும் எங்கள் அசாதாரண குழுவினருக்கு உங்கள் கலைத்திறன் மற்றும் ஆர்வம் துடரும் படத்திற்கு வெற்றியை தந்துள்ளது. இந்தப் படம் கவனத்துடன், நோக்கத்துடன், எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மையுடன் உருவாக்கப்பட்டது.

இவ்வளவு ஆழமாக எதிரொலிப்பதைப் பார்ப்பது ஒரு வெகுமதியை விட அதிகம். இது ஒரு உண்மையான ஆசீர்வாதம். என் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என மோகன்லால் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share