ADVERTISEMENT

ராகுல் காந்தியிடம் ஆலோசனை கேட்டு கட்சி தொடங்கிய விஜய்- பிரபாகரன் பெயரை சொல்ல திராணி இல்லை- நாம் தமிழர் ‘தாக்கு’

Published On:

| By Mathi

Vijay Seeman

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை கேட்டு அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யால், ஈழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை சொல்ல திராணி இல்லை என சீமானின் நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் கூறியுள்ளதாவது: “தாய் போல காத்த தலைவனை இழந்த ஈழத் தமிழர்கள்” என்ற சில வார்த்தைகளை சொன்னதால் )(பிரசார கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியது) விஜய், சீமான் இடத்தை எடுத்துக் கொண்டார் என்கிறார்கள்.15 வருடங்களுக்கு மேலாக எம் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை வீதி வீதியாக எடுத்துச் சென்று வீடு வீடாக சேர்த்து, தடை வழக்கு சிறை என அனைத்தையும் எதிர்கொண்டு இன்று தலைவரை தமிழ்நாட்டின் முக்கிய அடையாளமாக தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியது எம் அண்ணன் சீமான்.எம் தலைவர் குடும்பத்தையே அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்ற ராகுல் காந்தியிடம் கேட்டுக் கொண்டு அரசியல் கட்சி தொடங்கிய விஜய் எம் தலைவர் பெயரை சொல்லக்கூட திராணி இல்லாமல் மேம்போக்காக பேசுவதையே ஈழத் தமிழர் ஆதரவு என கொண்டால் அதைவிட முட்டாள்தனம் என்ன இருக்கிறது..??

ADVERTISEMENT

இன்று தலைவர் படம் பொதுவாக மாறி இருக்கிறது. ஆனால் 2009 முதல் 2014 வரை தலைவர் படம் வைத்திருந்தாலே உளவுத்துறை வீடு தேடி வரும்.காவல்துறை கண்காணிக்கும். விசாரணை என்று சொல்லி தேவையில்லாமல் காவல் நிலையத்தில் அமர வைப்பார்கள். பதாகையோ போஸ்டரோ வைத்தால் காவல்துறை கிழிக்கும். ஒட்டியவர்களை காவல் நிலையத்தில் அமர வைப்பார்கள். அதையெல்லாம் எதிர்கொண்டு, ஈழத்தை பேசினால் கேசு தான் வரும் ஆனால் காசு வரும் என்ற அவதூறையும் எதிர்கொண்டு, எல்லாவற்றையும் தகர்த்து தலைவனையே தத்துவமாக மாற்றி நிமிர்த்து நின்றால்.. இவர் ரெண்டு வார்த்தை சொல்வாராம். அதில் எங்கள் இடத்தை இவர் எடுப்பாராம்.

தம்பிகளா.. நீங்க படிக்கப் போகும் காலேஜ்ல நாங்க பிரின்ஸ்பால் இல்லப்பா. அந்த காலேஜே நாங்க தான். இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share