குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 170 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று ஏர் இந்தியா விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களில் அகமதாபாத் மேகனி நகர் பகுதியில் விபத்துக்குள்ளானது. Part of Crashed Air India Aircraft Lands
இந்த விபத்தில் விமானத்தின் ஒரு பகுதி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்தது. இதில் விடுதியின் கேண்டீன் முற்றிலுமாக சேதமடைந்தது.

விபத்து நடந்தபோது விடுதியில் 30 மாணவர்கள் இருந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Part of Crashed Air India Aircraft Lands