”200 மீட்டர் தொலைவில் தான் இருந்தேன்” : விமான விபத்தை நேரில் பார்த்தவர் அதிர்ச்சி பேட்டி!

Published On:

| By christopher

Shocking interview with eyewitness to the plane crash!

அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்ட நொடிகள் எப்படி இருந்தது என அதனை நேரில் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிர்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார். Shocking interview with eyewitness to the plane crash!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் AI171 இன்று (ஜூன் 12) மதியம் 1:38 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் மொத்தம் குழந்தைகள், விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணம் செய்த நிலையில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது.

ADVERTISEMENT

தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், விபத்தினை நேரில் கண்ட இளைஞர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், ”எனது அலுவலகம் இங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. நான் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவுடன், மிகவும் பலத்த சத்தம் கேட்டது. திடீரென அந்தப் பகுதி முழுவதும் புகை நிரம்பியது. இங்கே ஒரு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த விபத்து நடந்திருப்பதைக் கண்டோம்.

ADVERTISEMENT

நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, ​​இங்கே குப்பைகள் சிதறிக் கிடந்தன, தீப்பிடித்தது, இங்கு புகை கிளம்பியது. எதுவும் தெரியவில்லை… அப்போது விமானத்தின் இறக்கைகள் இங்கே விழுந்து கிடந்ததைக் கண்டு ஒரு விமானம் விபத்துக்குள்ளானது என்று எங்களுக்குத் தெரியவந்தது… உயிரிழப்புகள் பற்றி தெரியவில்லை. ஆனால் மருத்துவர்கள் வசிக்கும் ஒரு கட்டிடம் இங்கே உள்ளது” எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share