ADVERTISEMENT

தேமுதிகவுக்கு அதிமுக கொடுத்த உறுதி… எல்.கே.சுதீஷ் ஷாக் தகவல்!

Published On:

| By Selvam

lk sudhish says aiadmk

கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். lk sudhish says aiadmk assures

இந்தநிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது என்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்து தமிழ் திசை நாளிதழுக்கு எல்.கே.சுதீஷ் இன்று (மே 4) அளித்துள்ள பேட்டியில், “தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்​தார்​கள். இது முழுக்க முழுக்க உண்மை. நேரம் வரும்​போது அனைத்​தை​யும் வெளிப்​படை​யாகச் சொல்​வேன்.

அதி​முக அளித்த உத்​தர​வாதத்​தால் தான் நான் 2024 மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட​வில்​லை. இதற்கு முன் நான் 2009-ல் கள்​ளக்​குறிச்​சி​யிலும், 2014-ல் சேலத்​தி​லும் போட்​டி​யிட்​டேன். சேலத்​தில் எனக்​காக மோடி பிரச்​சா​ரம் செய்​தார். 2019-ல் மீண்​டும் பாஜக கூட்​ட​ணி​யில் கள்​ளக்​குறிச்​சி​யில் போட்​டி​யிட்​டேன். 2026 சட்​டப் பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடு​வது குறித்​தும் யோசித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறதா என்ற கேள்விக்கு, “2024 மக்​கள​வைத் தேர்​தல் வரைக்​கும் அதிமுகவோடு கூட்​ட​ணி​யில் இருந்​திருக்​கி​றோம். 2024 மக்களவை தேர்​தலில் பாஜக கூட்​ட​ணியை விட்டு அதி​முக வில​கி​னாலும் நாங்​கள் அதி​முக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிட்​டோம்.

இப்​போது அதி​முகவும் பாஜகவும் மீண்​டும் இணைந்​திருக்​கி​றார்​கள். இனி, மீண்​டும் அனை​வ​ரும் ஒன்​றிணைய வேண்​டும். தேமு​திக அக்​கூட்​ட​ணி​யில் தொடர்​வதா வேண்​டாமா என்​பதை எங்​களது பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜயகாந்த் உரிய நேரத்​தில் முடிவு செய்​வார்.

ADVERTISEMENT

ஜனவரி 9-ல் கடலூரில் தேமு​திக மாநாடு நடை​பெற உள்​ளது. அதில், தேமு​திக யாருடன் கூட்​டணி என்பதை பிரேமலதா முறைப்​படி அறி​விப்​பார்” என்று தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “ராஜ்யசபா சீட் குறித்து ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அப்படி எதுவும் வாக்குறுதி அளிக்கப்படவில்லை” என்று மறுத்துவிட்டார்.

உடனடியாக கேப்டன் விஜயகாந்த் என்ற சமூக தள பக்கத்தில், “சத்தியமே வெல்லும் நாளை நமதே” என பதிவு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share