கோடையில் ஆங்காங்கே முளைத்த கரும்புச்சாறு ஸ்டால் இன்று நிலைத்திருக்கின்றன. அங்கேயே குடிப்பது மட்டுமல்லாமல்… பார்சல் செய்தும் கொடுக்கிறார்கள். அதை வாங்கி வந்து சூப்பரான கரும்புச்சாறு நட்ஸ் பர்ஃபி செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
கோதுமை மாவு, மைதா மாவு – தலா கால் கப்
கரும்புச்சாறு – ஒன்றரை கப்
நாட்டுச்சர்க்கரை, தேங்காய்த் துருவல் – தலா 3 டேபிள்ஸ்பூன்
உடைத்து வறுத்த முந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டைத்தூள் – ஒரு சிட்டிகை
கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன் (இனிப்பு இல்லாதது)
நெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து நாட்டுச்சர்க்கரை, கரும்புச்சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். நாட்டுச்சர்க்கரை கரைந்ததும் அடுப்பை நிறுத்தி மஸ்லின் துணி அல்லது வடிகட்டியால் கலவையை வடித்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடாக்கி கோதுமை மாவு, மைதாவைத் தனித்தனியே சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் வடிகட்டிய கரும்புச்சாறு பாகை ஊற்றி குறைந்த தீயில் அடுப்பை வைக்கவும். இதனுடன் வறுத்த மாவு, தேங்காய்த் துருவல், வறுத்த நட்ஸ் சேர்த்து சிறிதளவு நெய்விட்டு கைவிடாமல், கட்டித்தட்டாமல் கிளறவும். பிறகு கோகோ பவுடர், பட்டைத்தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு கிளறவும். கலவை வெந்து நன்கு சுருண்டு வந்ததும் நெய் அல்லது வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிட்டு, விருப்பமான வடிவத்தில் கத்தியால் வெட்டியெடுத்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பக்ரீத் பிரியாணி பரிதாபம்: அப்டேட் குமாரு
முரண்டு பிடிக்கும் அட்லி… மல்லுக்கட்டும் தயாரிப்பாளர்கள்… அல்லு அர்ஜூன் படம் டிராப்?