கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையில்லை என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜூன் 4) தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் பேசியதற்கு, கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தக் லைஃப் திரைப்படத்தின் கர்நாடக ரிலீஸ் ஒத்திவைக்கப்படுள்ளது.
இந்தநிலையில், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜிவ்காந்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தை, அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நேருவிடம், “கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சொல்லியிருக்கிறாரே” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கே.என்.நேரு, “கமல்ஹாசன் பேசியதில் என்ன தவறு இருக்கிறது? தமிழில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் வந்தது. அதனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார். kannada row minister kn nehru