அதிகரிக்கும் வெப்ப அலைகள்: இந்தியாவின் செயல் திட்டங்களில் உள்ள போதாமை!

Published On:

| By Kavi

Indias heat wave action plans

கள்லுபைனா ரங்வாலா, ஸ்ரீமோயீ பட்டாச்சார்யா, ஜெயா திண்டாவ் Indias heat wave action plans

இந்த ஆண்டு இந்தியா இதுவரை கண்டிராத ஒரு நிகழ்வை அனுபவித்தது. வழக்கமாகக் குளிர்கால மாதமான பிப்ரவரியில் கோவாவையும் மகாராஷ்டிராவையும் வெப்ப அலைகள் தாக்கின. Indias heat wave action plans

இந்திய வானிலை ஆய்வுத் துறை, கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதம் வெப்பமாக இருந்தது என அறிவித்தது. இங்கு மட்டுமல்ல; ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் வெப்பநிலை அதிகரித்துவருகிறது. வெப்ப நாட்கள், வெப்ப அலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. Indias heat wave action plans

நாட்டின் சில பகுதிகளில் இப்போது பருவமழை முன்கூட்டியே தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், அதீத வெப்பத்தைச் சமாளிப்பதற்கான அவசரத் தேவை சற்றும் குறையவில்லை. வெப்ப அலைகளின் தொடக்கம் முன்கூட்டியே வருவதால், வெப்பச் செயல் திட்டங்கள் குறித்த விவாதங்கள் வேகம் பெற்றுள்ளன.

ஒன்பது இந்திய நகரங்களில் உள்ள வெப்பக் கொள்கைகள் குறித்த சமீபத்திய ஆய்வு, பெரும்பாலானவை உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசரகால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றன என்று கண்டறிந்துள்ளது.

Indias heat wave action plans

ஆனால், வெப்பத்தின் தாக்கத்தையும் பொது சுகாதார அமைப்புகளின் மீது அது செலுத்தும் அழுத்தத்தையும் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட நீண்ட கால நடவடிக்கைகள் அவற்றில் இல்லை. Indias heat wave action plans

இந்தியாவில், நகர்ப்புற முறைசாராத் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 80% பேர் வெப்ப அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது உடலின் உள் வெப்பநிலையைச் சீராக்கவோ அல்லது திறம்படக் குளிர்விக்கவோ முடியாதபோது ஏற்படும் நிலை. வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள், மோசமான காற்றோட்டம் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அல்லது குளிர்விக்கும் சாதனங்களின் வசதி இல்லாதவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம்.

பெரும்பாலான வெப்பச் செயல் திட்டங்கள் இந்த முக்கியமான பாதிப்புகளைக் கவனிக்கவில்லை. காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட அசாதாரண வெப்பநிலை, மோசமான திட்டமிடலாலும் விரைவான வளர்ச்சியாலும் நகர்ப்புறங்களில் உருவாகும் வெப்பம் என இரு விதமான அபாயங்களுடன் நகரங்கள் போராடிவருகின்றன. வெப்பத்திற்கான நடவடிக்கைகளைப் பயனுள்ளதாக்க, இந்திய நகரங்கள் ஒரே மாதிரியான உத்திகளைத் தாண்டி யோசிக்க வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் உள்ள வெப்பத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு அதற்கேற்பத் தங்கள் உத்திகளை மாற்றியமைக்க வேண்டும். Indias heat wave action plans

விவரங்களில் உள்ள சிக்கல் Indias heat wave action plans

வெப்பம் என்பது ஒரே மாதிரியானது அல்ல. அதன் தீவிரம், கால அளவு, தாக்கம் ஆகியவை இந்தியாவின் ஐந்து புவி-காலநிலை மண்டலங்களில் வேறுபடுகிறது: வெப்ப-வறண்ட, வெப்ப-ஈரப்பதமான, இரண்டும் இணைந்த கலவை, வெப்பமும் குளிரும். இந்த வகைப்பாடுகள் வெறும் தொடக்கம் மட்டுமே. நடைமுறையில், மாநிலங்களுக்குள்ளும் நகரங்களுக்குள்ளும் கூடக் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

Indias heat wave action plans

உதாரணமாக, தென் கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகள் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்போது, பெங்களூருவில் – அதன் உயரத்தின் காரணமாக – மிதமான காலநிலை நிலவுகிறது. அதே நேரத்தில் மாநிலத்தின் வடக்குப் பகுதிகள் வெப்ப-வறண்ட அல்லது கலவையான நிலைமைகளை எதிர்கொள்கின்றன.

மகாராஷ்டிரத்திற்குள்ளும் இதேபோன்ற வேறுபாட்டுகள் உள்ளன. மும்பையும் கடலோரப் பகுதிகளும் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்போது, உட்புறப் பகுதிகள் வெப்ப-வறண்ட நிலையில் இருக்கின்றன. மேலும் உற்று நோக்கினால், ஒரு நகரத்திற்குள்ளேயே, வெப்ப வெளிப்பாடு வெவ்வேறு பகுதிகளில் வியத்தகு அளவில் வேறுபடுகிறது. இந்த வேறுபாடுகள் நிலப் பயன்பாடு, கட்டுமானப் பொருட்கள், தாவரப் பரப்பு, நகர்ப்புற அடர்த்தி ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன. Indias heat wave action plans

இந்தியாவின் மும்பையில் நடந்துவரும் ஆராய்ச்சி, சில குடிசைப் பகுதிகளில் வெப்பநிலை அருகிலுள்ள மத்திய வருவாய்ப் பிரிவினரின் குடியிருப்புகளை விட 6°C வரை அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தது. மும்பையின் காலநிலை செயல்திட்டமும் பகுதிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வெப்பநிலை வேறுபாடுகளை ஆவணப்படுத்துகிறது. இந்த வேறுபாடுகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து உருவாகின்றன. Indias heat wave action plans

இதேபோல், பெங்களூரு காலநிலை செயல்திட்டம், நகரத்தின் திட்டமிடப்பட்ட மையப்பகுதி ஓரளவு குளிராக இருப்பதையும், திட்டமிடப்படாத புறப்பகுதிகள் (பல ஒடுக்கப்பட்ட மக்களின் தாயகம்) கணிசமாக வெப்பமாக இருப்பதையும் கண்டறிந்தது. இந்தப் பகுதிகளில் இரவு நேர நில மேற்பரப்பு வெப்பநிலை இரண்டு தசாப்தங்களில் 1.5°C க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தாவரங்களும் நீர்நிலைகளும் கொண்ட நன்கு திட்டமிடப்பட்ட பகுதிகளில் கோடைக்கால நில மேற்பரப்பு வெப்பநிலை 32°C-33°C ஆக இருந்தது. தொழில்துறைப் பெருக்கமும் மோசமான திட்டமிடலும் கொண்ட பகுதிகளில் வெப்பநிலை 35°C-36°C ஆக உயர்ந்தது. Indias heat wave action plans

Indias heat wave action plans

இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியமான அம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. நகர்ப்புற வடிவமும் நிலப் பயன்பாடும் வெப்ப வெளிப்பாட்டை ஆழமாக பாதிக்கின்றன. வெப்ப மேலாண்மைத் திட்டங்களுக்கான ஒட்டுமொத்தக் கொள்கைகள் சீரானதாக இருந்தாலும், திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்திகள் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். உதாரணமாக, வெப்பத்திலிருந்து தப்புவதற்கான அடைக்கலம் வழங்கும் இடங்களை அமைப்பது பொதுவான உத்தி என்றாலும், வெப்ப-ஈரப்பதமான பகுதிகளுக்கான கட்டிட வடிவமைப்பு, வெப்ப-வறண்ட பகுதிகளில் அமைக்கக்கூடிய கட்டிட வடிவமைப்பிலிருந்து பெரிதும் வேறுபட வேண்டும். கட்டுமானத்திற்கான பொருள் தேர்வு, காற்றோட்டம், மின்சாரம் பெறுவதற்கான வழிமுறைகள் வரை இரண்டு இடங்களுக்குமான தேவைகள் மாறுபட்டவை. Indias heat wave action plans

பல பரிமாணச் சிந்தனை

வெப்பத்தைச் சமாளிப்பதற்கான செயல்பாடு, பல பரிமாணச் சிந்தனையைக் கோருகிறது. வெப்பப் பிரச்சினையை மண்டல வாரியாகப் பிரித்து அணுகுதல், கட்டிட விதிகள், பொது சுகாதார அமைப்புகள், பணியிடப் பாதுகாப்பு, தொழில்சார் ஆபத்துக்கான தீர்வுகள் எனப் பல்வேறு பரிமாணங்களில் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

சமூகத்தின் சில பிரிவினர் பிறரைக் காட்டிலும் கூடுதலாக வெப்ப அபாயங்களுக்கு ஆட்படும் வகையில் இடம் சார்ந்த சமத்துவமின்மை நிலவுகிறது. இதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வெப்ப மேலாண்மையைச் சிறப்பாக மேற்கொள்ள நகரங்கள் வலுவான ஆதாரங்களுடன் தங்களுடைய வெப்பப் பிரச்சினையை முன்வைக்க வேண்டும். நகரங்கள் வெப்பநிலையை மட்டுமல்லாமல், பாதிக்கப்படக்கூடிய மக்களின் அனுபவங்களையும் பதிவு செய்யும் உள்ளூர்த் தரவுகளை உருவாக்க வேண்டும். யார் அதிகம் ஆபத்தில் உள்ளனர் என்பதையும் ஏன் என்பதையும் புரிந்துகொள்ள, வெப்பத் தரவைச் சுகாதாரப் பதிவுகள், சமூக-பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும்.

Indias heat wave action plans

மாநில அளவிலான திட்டங்கள் பெரும்பாலும் விவசாயம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு ஆகிய முதன்மைத் துறைகளில் கவனம் செலுத்துகின்றன. நகர்ப்புறப் பகுதிகள் குறைந்த கவனத்தையே பெறுகின்றன. நகர்ப்புறங்களுக்கான குறிப்பான திட்டங்கள் தேவை. மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்கள்கூட இன்னும் தங்களுக்கென்று தனியான வெப்பச் செயல் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அவற்றின் காலநிலை செயல் திட்டங்கள் வெப்பத்தை எதிர்கொள்வதற்கான திட்டத்திற்குச் சிறந்த அடித்தளத்தை வழங்குகின்றன.

இந்த நகரங்கள், இடத்துக்கு ஏற்ற தீர்வு என்னும் கருத்தை முன்னெடுக்கச் சிறந்த முன்மாதிரிகளாக விளங்குகின்றன. அமைப்பு ரீதியான வலிமை இன்றி எந்தத் தீர்வும் சாத்தியமில்லை. நகர்ப்புற நிர்வாக அமைப்புகள் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்லாமல், நிறுவன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் வலுப்பெற வேண்டும். வெப்பத்தின் தாக்கத்திற்குத் தீர்வுகாண்பதற்குப் பல்வேறு துறைகளின் – சுகாதாரம், திட்டமிடல், போக்குவரத்து, வீட்டுவசதி போன்றவை – ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. இந்திய நகரங்கள் ஏற்கனவே காலநிலை நெருக்கடியில் உள்ளன. நமது தொழிலாளர் சக்தியில் 75% க்கும் அதிகமானோர் வெப்பத்தின் காரணமாக ஆழமான பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

இது நமது பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட 40% ஐ ஆபத்தில் தள்ளுகிறது. எல்லா இடங்களுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை பொருந்தாது. உயிர்களைப் பாதுகாக்கவும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் பாதிப்புகளிலிருந்து மீண்டு வரவும் மக்களின் வாழும் யதார்த்தங்களையும், அவர்கள் வாழும் இடங்களின் தன்மைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அந்தந்தப் பகுதிகளுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

நன்றி: ஸ்க்ரால் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share