“ஆளுநர் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டவர் அல்ல” – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

Published On:

| By Kalai

governor highcourt

ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்து வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவி, ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராகவும் பதவி வகிக்கிறார். ஆளுநராக இருப்பவர் ஆதாயம் தரும் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது என்பது விதி.

எனவே இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார்.

அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும், ஆளுநர் இதுதொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிடக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று(ஜனவரி 5) பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி இ.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. குடியரசுத் தலைவரோ, ஆளுநர்களோ நீதிமன்றங்களுக்கு பதில் சொல்ல கட்டுப்பட்டவர்கள் அல்ல.

ஆளுநருக்கு நீதிமன்றம் மூலமாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடியாது என்று தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன தீர்ப்பு சுட்டிக்காட்டி ஆளுநருக்கு எதிரான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கலை.ரா

சென்னை பள்ளி மாணவர்களுக்காக 20 பேருந்துகள்: எந்த வழித்தடங்களில் தெரியுமா?

“மாநிலத் தலைவர் போல் செயல்படவேண்டாம்” – ஆளுநருக்கு டி.ஆர்.பாலு கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share