அதிமுக பொதுச்செயலாளராக தாம் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை (Case Against AIADMK General Secretary Post) நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் வழக்கறிஞர் சூரியமூர்த்தி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், இந்த வழக்கைத் தாக்கல் செய்த திண்டுக்கல் சூரியமூர்த்தி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை; வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவர்; ஆகையால் சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கில், அதிமுக கட்சி விதிகளின் படி உறுப்பினர் அட்டையை வழங்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமே இல்லை; அதிமுக விதிப்படி கட்சியின் பொதுச்செயலாளர் என்பவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; தாம் அதிமுக உறுப்பினர்தான் என சூரியமூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்று சூரியமூர்த்திக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி தள்ளுபடி செய்தது.