பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2025-26-ம் ஆண்டு சந்தைப் பருவத்தில் 14 காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. Cabinet approves Minimum Support Prices
இதுகுறித்து பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று (மே 28) அறிவிப்பில், “ விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்காக, 2025-26 சந்தைப் பருவத்திற்கான காரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
செலவு என்பது பணிக்கு அமர்த்தப்பட்ட மனித உழைப்பு, காளை மாடுகளின் உழைப்பு / இயந்திர உழைப்பு, குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கு செலுத்தப்படும் வாடகை, விதைகள், உரங்கள் போன்ற பொருள் உள்ளீடுகளைப் பயன்படுத்துவதற்கான செலவுகள், நீர்ப்பாசனக் கட்டணங்கள், கருவிகள் மற்றும் பண்ணை கட்டிடங்களின் மீதான தேய்மானம், பணி மூலதனத்தின் மீதான வட்டி, பம்ப் செட்களை இயக்குவதற்கான டீசல்/மின்சாரம், இதர செலவுகள் மற்றும் குடும்ப உழைப்பின் கணக்கிடப்பட்ட மதிப்பு போன்ற அனைத்து செலுத்தப்பட்ட செலவுகளையும் உள்ளடக்கியதாகும்.
நெல் (கிரேடு ஏ), சோளம் (மால்தண்டி) மற்றும் பருத்தி (நீண்ட தானியம்) ஆகியவற்றுக்கான செலவுத் தரவுகள் தனித்தனியாக தொகுக்கப்படவில்லை
2025-26 சந்தைப்படுத்தல் பருவத்திற்கான காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான 2018-19 மத்திய பட்ஜெட் அறிவிப்பிற்கு ஏற்ப உள்ளது.
கம்பு (63%), அதைத் தொடர்ந்து மக்காச்சோளம் (59%), துவரம் பருப்பு (59%) மற்றும் உளுந்து (53%) ஆகியவற்றில் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி செலவை விட எதிர்பார்க்கப்படும் லாப வரம்பு மிக அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி செலவை விட லாப வரம்பு 50% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
நெல்லுக்கு 3 சதவிகம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுவான மற்றும் ஏ தர ரகங்களுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்துள்ளது. இதனால், பொதுவான ரகங்களுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,369 ஆகவும், ஏ தர ரகங்களுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,389 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சோளம் குவிண்டாலுக்கு 328 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஹைபிரிட் வகை சோளம் 3,699 ரூபாயகவும் மல்தண்டி வகை சோளம் 3,749 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கம்பு குவிண்டாலுக்கு ரூ.150 உயத்தப்பட்டு, 100 கிலோ கம்பின் விலை 2,775ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராகி விலை 596 ரூபாய் உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் விலை 4886ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கா சோளம் விலை 175 உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டால் விலை 2400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
துவரம் பருப்பின் ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.450 உயர்த்தப்பட்டு, ரூ.8,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உளுத்தம்பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு குவிண்டால் உளுந்தின் விலை ரூ.7,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாசிப்பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.86 அதிகரிக்கப்பட்டு, ரூ.8768 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
எண்ணெய் விதைகளை பொறுத்தவரை, நிலக்கடலை, சூரியகாந்தி விதை, சோயாபீன், எள் விதை, நைஜர் விதை மீதான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பருத்தியை பொறுத்தவரை, நடுத்தர வகையின் குறைந்தபட்ச ஆதரவு விலை 589 ரூபாய் உயர்த்தப்பட்டு குவிண்டால் 7,710 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்ட வகை பருத்திக்கு 589 ரூபாய் உயர்த்தப்பட்டு 8110 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Cabinet approves Minimum Support Prices