மதுரை கீழக்கரை அருகே பிரமாண்ட பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 24) திறந்து வைத்தார்.
தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டினை கொடியசைத்து துவங்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய ஆரம்பித்தன. காளையர்களும் அவற்றை கட்டித்தழுவி தங்களது வீரத்தை நிரூபித்தனர்.
இதில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தங்க மோதிரங்களை பரிசளித்தார்.
மொத்தம் 5௦௦ காளைகளும், 3௦௦ வீரர்களும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்கின்றனர். இதனால் 6 சுற்றுகளாக இந்த போட்டி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 5௦ வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வழங்கும் பரிசுகுறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதன்படி இன்று நடைபெறும் போட்டியில் முதலிடம் பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த மாட்டிற்கும் தலா ஒரு மஹேந்திரா தார் ஜீப் பரிசாக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழங்கப்படவுள்ளது. இதன் விலை ரூபாய் 21.6௦ லட்சம் ரூபாய் ஆகும்.
இதேபோல இரண்டாவது இடம்பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த மாட்டிற்கும் தலா ஒரு டிவிஎஸ் பைக் பரிசாக வழங்கப்படும்.
மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் தங்க நாணயங்கள், மோதிரங்கள், சைக்கிள் ஆகியவை பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர முதலிடம் பிடிக்கும் வீரருக்கு ரூபாய் 1 லட்சம், இரண்டாமிடம் பிடிக்கும் வீரருக்கு ரூபாய் 75 ஆயிரம்,
மூன்றாமிடம் பிடிக்கும் வீரருக்கு ரூபாய் 5௦ ஆயிரம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
இதேபோல முதலிடம் பிடிக்கும் மாட்டிற்கு ரூபாய் 1 லட்சம், இரண்டாமிடம் பிடிக்கும் மாட்டிற்கு ரூபாய் 75 ஆயிரம், மூன்றாமிடம் பிடிக்கும் மாட்டிற்கு ரூபாய் 5௦ ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆஸ்கார் 2024: 13 பிரிவுகளில் தேர்வான நோலனின் ஓப்பன்ஹைமர்
மேற்கு வங்கத்தில் திருணமூல் தனித்து போட்டி: மம்தா அறிவிப்பு!