விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் பறக்கத் தொடங்கியதுமே விமானி கட்டுபாட்டு அறைக்கு வார்னிங் கொடுத்துள்ளார். air india pilot may day warning
போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக ஏர் இந்தியா விமானம் இன்று (ஜூன் 12) மதியம் அகமதாபாத்தில் விபத்தில் சிக்கியது. விமானம் கீழே விழுந்த, சில விநாடிகளுக்குள் தீப்பற்றி வெடித்துள்ளது. இதில் எரிமலை போல தீப்பிழம்பு பரவிய வீடியோவும் இணையத்தில் வெளியானது. இந்த விபத்தில் தற்போது வரை 170 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் விமானம் தரையில் விழுவதற்கு முன்னதாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
விமானம் தொடர்பை இழப்பதற்கு சற்று முன்பு, கேப்டன் சுமீத் சபர்வால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு ‘மே டே’ என எமர்ஜென்சி அழைப்பு விடுத்ததாக சிவில் போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது.
மேடே என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு துயர நிகழ்வுக்கான சமிக்ஞையாகும்.
இது முதன்மையாக விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் தகவல்தொடர்புகளில் உயிருக்கு ஆபத்தான அவசரநிலையைக் குறிக்கப் பயன்படுகிறது.
“அவசர உதவி ” அல்லது “எமர்ஜென்சி” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை பிரெஞ்சு மொழியில் (m’aidez) உதவி செய்யுங்கள் என்பதிலிருந்து வந்ததாகும்.
விமானி ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இப்படி சொல்லும் போது, அந்த அழைப்புக்கு முன்னுரிமை கொடுத்து பதிலளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்படிதான் கேப்டன் சுமீத் சபர்வால், மே டே, மே டே என்று அழைத்திருக்கிறார். இவ்வாறு சொன்ன சில நொடிகளில் விமானம் தொடர்பை இழந்துள்ளது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானியை தொடர்பு கொள்வதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. air india pilot may day warning