தரையில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம் : பயணிகளின் நிலை?

Published On:

| By Kavi

குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. air india flight met accident gujarat

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் இன்று லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஆனால் விமானம் புறப்பட்ட 10 நிமிடத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில் அந்த பகுதியே பற்றி எரிந்து புகை மண்டலமாக காணப்படுகிறது.

அந்த விமானத்தில் 200 பேர் வரை பயணம் செய்ததாகவும், பலர் படுகாயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

ஆனால் எத்தனை பயணிகள், எதனால் விபத்து ஏற்பட்டது என இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை.

சம்பவ இடத்தில் விமானப்படை குழுவினரும் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share