ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கியவர்கள் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Air India crash Death toll rise
அகமதாபாத்தில் இருந்து லண்டனின் கட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட போயிங் 787-7 ரக ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் இன்று மதியம் விபத்தில் சிக்கியது.
மேகானி நகர் என்ற பகுதியில் ஒரு கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
சிவில் போக்குவரத்து இயக்குநரக தகவல்படி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 232 பயணிகள் இருந்துள்ளனர். அதில் பெரியவர்கள் 230 பேர், குழந்தைகள் 2 பேர். விமான பணியாளர்கள் 10 பேர், என மொத்தமாக 242 பேர் பயணித்துள்ளனர்.
தற்போது விபத்து நடந்த இடத்தில் முற்றிலும் எரிந்த நிலையில் பல உடல்கள் கிடப்பதாகவும், 40க்கும் அதிகமான உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. சுமார் 130 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர்.
விமானத்தில் பயணித்தவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஏர் இந்தியா விமானம் தனது எக்ஸ் பக்கம் மூலம் கூறியுள்ளது. Air India crash Death toll rise