முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Will OPS Lose His MLA Post for Contesting Against AIADMK?
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டார். இதனை முன்வைத்து, அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணை பிரிவு 2/1-ன் கீழ் ஓ.பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும் என்று போடிநாயக்கனூர் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுக்கு மனு அனுப்பி உள்ளார்.
இந்த மனு மீது சபாநாயகர் அப்பாவு என்ன முடிவு எடுப்பார்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.