அதிமுக வேட்பாளருக்கு எதிராக போட்டி- ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி பறிப்பா?

Published On:

| By Minnambalam Desk

O panneerselvam

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Will OPS Lose His MLA Post for Contesting Against AIADMK?

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டார். இதனை முன்வைத்து, அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணை பிரிவு 2/1-ன் கீழ் ஓ.பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும் என்று போடிநாயக்கனூர் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுக்கு மனு அனுப்பி உள்ளார்.

இந்த மனு மீது சபாநாயகர் அப்பாவு என்ன முடிவு எடுப்பார்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share