இப்படி செய்யாதீங்க கொங்கு தங்கம்ஸ்… விஜய் அன்புக்கட்டளை!

Published On:

| By Selvam

Vijay advised cadres to maintain

தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடும் சுய ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 30) அறிவுறுத்தியுள்ளார். Vijay advised cadres to maintain

பூத் கமிட்டிக் கூட்டம் கோவையில் ஏப்ரல் 26,27 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விஜய் கோவைக்கு வந்தது முதல் அவர் அங்கிருந்து திரும்பிய வரை தொண்டர்கள், ரசிகர்கள் கூட்டம் அவரை திக்குமுக்காட வைத்தது.

“கோவையில் விஜய் கண்ட கூட்டம் அவருக்கு அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்திவிட்டன. இப்போது அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தாலும், கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதற்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்” என்று மின்னம்பலத்தில் நேற்று (ஏப்ரல் 29) செய்தி வெளியிட்டிருந்தோம்.

 Vijay advised cadres to maintain

இந்தநிலையில், தொண்டர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்.

I love you Kovai and Kongu Thangams. நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும்.

2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு.

அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.

அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்… நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும்.

அதுதான் நீங்க… இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும்… உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ். அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன்.

ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும். எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்.

 Vijay advised cadres to maintain

நீங்கதான் எனக்கு precious. இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல. உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். உங்க அன்ப நான் மதிக்கறேன். இனி எப்பவும் மதிப்பேன்.

அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது. நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க…தப்பே இல்ல…

நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ். அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும். இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன். செய்வீங்க… செய்றீங்க… ஓகே?… Thank u friends…. Love you all…” என்று தெரிவித்துள்ளார். Vijay advised cadres to maintain

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share