ஊர்வசி மகள் நாயகியாக அறிமுகம்!

Published On:

| By uthay Padagalingam

urvashi daughter Tejalakshmi jayan going to be heroine

தமிழ் திரையுலகம் எத்தனையோ ‘நடிப்பு ராட்சசி’களைக் கண்டு வந்திருக்கிறது. அந்த பட்டியலில் ஒருவராக இடம்பிடித்து, இன்றுவரை நம்மைத் தனது நடிப்பால் வியப்புக்கு உள்ளாக்குபவர் நடிகை ஊர்வசி. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இதர மொழிகளிலும் இவருக்குப் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. urvashi daughter Tejalakshmi jayan going to be heroine

’தூள்’, ‘திருட்டுபயலே’ உள்ளிட்ட சில தமிழ் படங்கள் வழியே ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் மனோஜ். மலையாளத் திரையுலகில் நாயகனாக, வில்லனாக, குணசித்திர நடிகராகத் தொடர்ந்து வருபவர்.

ஊர்வசி மற்றும் அவரது முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயனின் மகள் தேஜா லட்சுமி. ’சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ எனும் மலையாளப் படத்தில் இவர் நாயகியாக அறிமுகமாகிறார்.

புதுமுக இயக்குனர் பினு பீட்டர் இதனை இயக்குகிறார். இதில் நாயகனாக நடிக்கிறார் சர்ஜனோ காலித். இவர் ‘டிமாண்டி காலனி 2’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் தலைகாட்டியவர்.

எர்ணாகுளத்தில் நடந்த இப்படத்தின் தொடக்க விழாவில் மனோஜ் கே ஜெயன் பங்கேற்றார். அப்போது, ’இது தனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தேஜாவுக்கு ஏழு வயதாக இருக்கையில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு இடம்பெயர்ந்ததாகவும், படிப்பு மற்றும் வேலை என அனைத்திலும் அவரது விருப்பத்திற்கு முன்னுரிமை தந்ததாகவும் கூறியிருக்கிறார். பெங்களூருவில் சில நிறுவனங்களில் அவர் வேலை பார்த்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

தேஜாவின் நடிப்பு ஆசையை மனைவி ஆஷாவின் வழியே தான் அறிந்ததாகத் தெரிவித்திருக்கிறார் மனோஜ். ’மகளின் நடிப்பு ஆசையை அறிந்தவுடனேயே, ஊர்வசியைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி வருமாறு கூறினேன். அவரும் சென்னை சென்று ஊர்வசியிடம் தனது விருப்பத்தைக் கூறி ஆசீர்வாதம் பெற்றார்.

இந்த படத்தின் கதையைக் கூற இயக்குனர் வந்தபோது, முதலில் ஊர்வசியிடம் சொல்லுமாறு சொல்லி அனுப்பினேன். ஏனென்றால், அவர் சிறந்த நடிகை என்பதால் சரியான முடிவை எடுப்பார் என்று கருதினேன். அவ்வாறே ஊர்வசியும் தேஜாவும் கதையை முழுமையாக அறிந்தபிறகே, நான் அதனைக் கேட்டேன். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது’ என்று அந்த விழாவில் பேசியிருக்கிறார். கூடவே லேசாகக் கண் கலங்கியிருக்கிறார்.

நடிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்து, கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் கழித்தே இந்த படத்தில் அறிமுகமாகிறாராம் தேஜாலட்சுமி. ஆதலால், நடிப்பில் பயிற்சி பெற்ற பிறகே அவர் களமிறங்குவதாகக் கருதலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share